உச்சநீதிமன்றத் தீர்ப்பு எதிரொலி - தாராபுரத்தில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்று தாராபுரம் நகர அதிமுகவினர் பட்டாசு வெடித்து உற்சாகமாகக் கொண்டாடினர்.



திருப்பூர்: அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று உச்சநீதிமன்றம் இன்று பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது.



இது தொடர்பாக ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இந்தத் தீர்ப்பால் அதிமுக எடப்பாடி பழனிசாமியின் வசமாகியுள்ளது.



உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவையடுத்து, திருப்பூர் கிழக்கு மாவட்ட அதிமுகவினர் தாராபுரத்தில் அதிமுக பொருளாளர் சின்னப்பன் தலைமையில் ஆவின் துணைத் தலைவர் டி. எஸ்.சிவக்குமார் முன்னிலையில் அண்ணா சிலை, பெரியகடை வீதி, உள்ளிட்ட பகுதிகளில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.



அப்போது, எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்தை கையில் ஏந்தியவாறு அதிமுகவினர் எடப்பாடியார் வாழ்க எடப்பாடியார் வாழ்க என முழக்கமிட்டு உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...