உச்சநீதிமன்றத் தீர்ப்பு எதிரொலி - தாராபுரத்தில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்று தாராபுரம் நகர அதிமுகவினர் பட்டாசு வெடித்து உற்சாகமாகக் கொண்டாடினர்.



திருப்பூர்: அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று உச்சநீதிமன்றம் இன்று பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது.



இது தொடர்பாக ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இந்தத் தீர்ப்பால் அதிமுக எடப்பாடி பழனிசாமியின் வசமாகியுள்ளது.



உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவையடுத்து, திருப்பூர் கிழக்கு மாவட்ட அதிமுகவினர் தாராபுரத்தில் அதிமுக பொருளாளர் சின்னப்பன் தலைமையில் ஆவின் துணைத் தலைவர் டி. எஸ்.சிவக்குமார் முன்னிலையில் அண்ணா சிலை, பெரியகடை வீதி, உள்ளிட்ட பகுதிகளில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.



அப்போது, எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்தை கையில் ஏந்தியவாறு அதிமுகவினர் எடப்பாடியார் வாழ்க எடப்பாடியார் வாழ்க என முழக்கமிட்டு உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...