கோவையில் உலாவரும் மக்னாவைப் பிடிக்கும் பணி தீவிரம் - கும்கி யானை சின்னத்தம்பி வரவழைப்பு

கோவை பேரூர் பகுதியில் சுற்றித் திரியும் மக்னா யானையைப் பிடிக்கும் பணிக்காக கும்கி யானை சின்னத்தம்பி தற்போது வரவழைக்கப்பட்டுள்ளது. மயக்க ஊசி செலுத்தி யானையை பிடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.



கோவை: தர்மபுரி மாவட்டத்தில் இருந்து பிடிக்கப்பட்டு டாப்சிலிப் வனப்பகுதியில் விடப்பட்ட மக்னா யானை நேற்று கோவை மாநகர் பகுதிக்குள் நுழைந்தது.



பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக சுற்றித் திரிந்த அந்த யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் மற்றும் கோவை மாநகர காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.



நேற்றிலிருந்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சி நடைபெற்று வரும் நிலையில், தற்பொழுதுவரை யானை வனப்பகுதிக்குள் செல்லாமல் கோவை மாநகர் பகுதிக்குள் சுற்றி வருகிறது.



பேரூர் பகுதியில் உள்ள SMS தனியார் கல்லூரி பின்புறம் இருக்கும் தோட்டத்தில் மக்னா யானை தற்போது சுற்றிவந்துகொண்டுள்ளது.



இதையடுத்து, மக்னாவைப் பிடிப்பதற்காக, டாப்சிலிப் யானைகள் முகாமிலிருந்து சின்னத்தம்பி கும்கி யானை அழைத்து வரப்பட்டுள்ளது.



சின்னத்தம்பி யானையை கொண்டு மக்னா யானையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.



மயக்க ஊசி செலுத்தி மக்னா யானையைப் பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...