கோவை ஆர்.டி.ஓ ஆய்வு - ஆவணங்கள் இல்லாத 50 வாகனங்கள் பறிமுதல்!

கோவையில் போக்குவரத்து காவல்துறையினர் நடத்திய அதிரடி ஆய்வில் சாலைவரி செலுத்தாதது, வாகன அனுமதி புதுப்பிக்காதது, தகுதிச்சான்று இல்லாமலும், அதை புதுப்பிக்காமலும் வாகனங்களை இயக்கியது உள்ளிட்ட காரணங்களுக்காக 50 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


கோவை: கோவை சரக போக்குவரத்துத் துறையின் கீழ், கோவை, நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த மூன்று மாவட்டங்களிலும் ஒரு குறிப்பிட்ட நாளில், சுழற்சி முறையில் வெவ்வேறு பகுதிகளிலும் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்படும். அதன்படி, கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், நேற்று முன் தினம் இரவில் இந்த அதிரடி ஆய்வு நடத்தப்பட்டது.

திருச்சி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, நஞ்சுண்டாபுரம் ரோடு, வாலாங்குளம் ரோடு மற்றும் சூலுார் ஆகிய பகுதிகளில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள், ஏராளமான வாகனங்களை மடக்கி இந்த ஆய்வை மேற்கொண்டனர். இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த ஆய்வில், மொத்தம் 347 வாகனங்கள் சோதனையிடப்பட்டன.

அப்போது, சாலைவரி செலுத்தாதது, வாகன அனுமதி புதுப்பிக்காதது, தகுதிச்சான்று இல்லாமலும், அதை புதுப்பிக்காமலும் வாகனங்களை இயக்கியது உள்ளிட்ட காரணங்களுக்காக 50 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மொத்தம் ஆறு லட்ச ரூபாய்க்கு மேல் அபராதமும் விதிக்கப்பட்டது. வாகனங்களுக்குச் செலுத்த வேண்டிய வரி, காப்பீடு, பர்மிட், தகுதிச்சான்றுகளைப் புதுப்பித்து ஆவணங்களை வைத்திருக்க வேண்டுமென்று வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இது குறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'இதுபோன்று தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளுமாறு, கோவை சரக போக்குவரத்துத்துறை இணை கமிஷனர் சிவக்குமரன் அறிவுறுத்தியுள்ளார். அன்றாடப்பணிகளில் பாதிப்புகள் ஏதுமின்றி தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது.

இதன் வாயிலாக, வாகன ஓட்டிகள் மற்றும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதுடன் விபத்துகள் தவிர்க்கப்படும். அரசுக்கும் வருவாய் கிடைக்கும் என்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...