உடுமலையில் சீமானை கைது செய்யக் கோரி சமத்துவ அம்பேத்கர் மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

அருந்ததியர் சமுதாயத்தினரை அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை தீண்டாமை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யக்கோரி உடுமலையில் சமத்துவ அம்பேத்கர் மக்கள் கட்சி நிறுவன தலைவர் தங்கராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானைகண்டித்து உடுமலையில் சமத்துவ அம்பேத்கர் மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு சமத்துவ அம்பேத்கர் மக்கள் கட்சி நிறுவன தலைவர் தங்கராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதனை ஆதரித்து சீமான் பிரச்சாரம் செய்த போது, அருந்ததியர் சமுதாயத்தினரை அவதூறாக பேசியதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கபட்டது.

மேலும் ஆதாரம் இல்லாமல் அருந்ததியர் சமுதாயத்தினரை அவதூறாக பேசிய சீமானை தீண்டாமை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் உடுமலை மேற்கு ஒன்றிய செயலாளர் தங்கவேல், குடிமங்கலம் ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன் ,ஒன்றிய பொருளாளர் முத்துக்கருப்பன், நகர செயலாளர் வேலுச்சாமி உட்படப் பலர் கலந்து கொண்டனர்

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...