உடுமலையில் சீமானை கைது செய்யக் கோரி சமத்துவ அம்பேத்கர் மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

அருந்ததியர் சமுதாயத்தினரை அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை தீண்டாமை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யக்கோரி உடுமலையில் சமத்துவ அம்பேத்கர் மக்கள் கட்சி நிறுவன தலைவர் தங்கராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானைகண்டித்து உடுமலையில் சமத்துவ அம்பேத்கர் மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு சமத்துவ அம்பேத்கர் மக்கள் கட்சி நிறுவன தலைவர் தங்கராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதனை ஆதரித்து சீமான் பிரச்சாரம் செய்த போது, அருந்ததியர் சமுதாயத்தினரை அவதூறாக பேசியதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கபட்டது.

மேலும் ஆதாரம் இல்லாமல் அருந்ததியர் சமுதாயத்தினரை அவதூறாக பேசிய சீமானை தீண்டாமை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் உடுமலை மேற்கு ஒன்றிய செயலாளர் தங்கவேல், குடிமங்கலம் ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன் ,ஒன்றிய பொருளாளர் முத்துக்கருப்பன், நகர செயலாளர் வேலுச்சாமி உட்படப் பலர் கலந்து கொண்டனர்

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...