புதிய மின் இணைப்பு பெற உரிமைச்சான்று கேட்கும் மின்சார வாரியம் - தவிக்கும் உடுமலை மக்கள்!

உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் புதிய மின் இணைப்பு பெற விண்ணப்பிக்கும் பொதுமக்களிடம் மின்வாரிய அதிகாரிகள் உரிமைச்சான்று கேட்கும் நிலையில், வருவாய் துறையினர் உரிமை சான்று கொடுக்க மறுப்பதால் செய்வதறியாது பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.


திருப்பூர்: உடுமலை பகுதியில் புதிய மின் இணைப்பு பெற மின்வாரிய அதிகாரிகள் உரிமைச்சான்று கேட்பதால் பொதுமக்கள் செய்வது அறியாது தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறியதாவது, பல இன்னல்களுக்குப் பிறகு புதிய வீடு கட்டி அதற்கு, மின் இணைப்பு பெறுவதற்காக மின் வாரியத்தை அணுகும்போது ஆதார் நகல், வீட்டு பத்திரம், வீட்டு வரி ரசீது உள்ளிட்டவைகளோடு, இடத்துக்கு சொந்தக்காரர் அவர் தான் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக உரிமைச்சான்று வழங்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

இதை வாங்க, வருவாய்த்துறை அதிகாரிகளை அணுகினால், உரிமைச்சான்று வழங்க வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதாக கூறுகின்றனர். இதனால் பலரும் தவிக்கும் நிலை உரு வாகியுள்ளது.

இந்நிலையில் மின்வாரிய அதிகாரிகளுக்கு குறிப்பிட்ட தொகையை கொடுத்தால் உரிமைச்சான்று இல்லாமலேயே மின் இணைப்பு பெற்று தருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எனவே கூட்டுறவு கடன் சங்கங்களில், விவசாயிகள் கடன் பெறுவதற்கு உரிமைச்சான்று தேவையில்லை என்று அறிவித்தது போல மின் வாரியத்திலும் அறிவிக்க வேண்டும் எனக் கூறுகின்றனர்.

புதிய மின் இணைப்பு பெறுவதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் போது தேவையான ஆவணங்கள் பட்டியலில் உரிமைச் சான்று குறிப்பிடப்படவில்லை. இதுகுறித்த விவரம் தெரிந்தவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து மின் இணைப்பு பெறுகின்றனர்.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...