கோவை பாரதியார் பல்கலை விடுதி மாணவிகள் திடீர் போராட்டம் - உணவு, தண்ணீர் முறையாக வழங்கவில்லை என குற்றச்சாட்டு!

கோவை மருதமலையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழக விடுதிகளில் மாணவிகளுக்கு, தரமற்ற உணவு, தண்ணீர் வழங்கப்படுவதாக கூறி பல்கலைக்கழக வளாகம் முன்பு 50க்கும் மேற்பட்ட மாணவிகள் கண்டன பதாகைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழக விடுதிகளில் முறையாக உணவு வழங்கப்படாததை கண்டித்து மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மருதமலை பகுதியில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் மூன்று விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு சுமார் 1500க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர்.

3 விடுதிகளில் உள்ள மாணவிகளுக்கும் தனித்தனியாக உணவு சமைத்து வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது மூன்று விடுதிகளுக்கும் சேர்த்து உணவு சமைக்கப்பட்டு விநியோகிக்கப்படுவதால் உரிய நேரத்தில் உணவு வழங்கப்படுவதில்லை என கூறப்படுகிறது.

மேலும் உணவு தரமற்ற முறையில் இருப்பதாகவும் கூறி பல்கலைக்கழக வளாகம் முன்பு விடுதி மாணவிகள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் திடீரென கண்டன பதாகைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தரமான உணவு உரிய நேரத்தில் வழங்கப்பட வேண்டும் எனவும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் சரியாக இல்லை என்பதால் அதனையும் உடனடியாக சரி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

மேலும் கழிப்பிடங்களை சுழற்சி முறையில் சுத்தம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்களை எழுப்பினர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வடவள்ளி காவல்துறையினர் மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் பின்னர் மாணவர்களை அழைத்து கல்லூரி நிர்வாகம் பேச்சு வார்த்தை நடத்தியது.

அப்போது மாணவர்களின் கோரிக்கைகள் அனைத்திற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லூரி நிர்வாகம் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

திடீரென நடைபெற்ற இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...