கோவை பாரதியார் பல்கலை விடுதி மாணவிகள் திடீர் போராட்டம் - உணவு, தண்ணீர் முறையாக வழங்கவில்லை என குற்றச்சாட்டு!

கோவை மருதமலையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழக விடுதிகளில் மாணவிகளுக்கு, தரமற்ற உணவு, தண்ணீர் வழங்கப்படுவதாக கூறி பல்கலைக்கழக வளாகம் முன்பு 50க்கும் மேற்பட்ட மாணவிகள் கண்டன பதாகைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழக விடுதிகளில் முறையாக உணவு வழங்கப்படாததை கண்டித்து மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மருதமலை பகுதியில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் மூன்று விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு சுமார் 1500க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர்.

3 விடுதிகளில் உள்ள மாணவிகளுக்கும் தனித்தனியாக உணவு சமைத்து வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது மூன்று விடுதிகளுக்கும் சேர்த்து உணவு சமைக்கப்பட்டு விநியோகிக்கப்படுவதால் உரிய நேரத்தில் உணவு வழங்கப்படுவதில்லை என கூறப்படுகிறது.

மேலும் உணவு தரமற்ற முறையில் இருப்பதாகவும் கூறி பல்கலைக்கழக வளாகம் முன்பு விடுதி மாணவிகள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் திடீரென கண்டன பதாகைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தரமான உணவு உரிய நேரத்தில் வழங்கப்பட வேண்டும் எனவும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் சரியாக இல்லை என்பதால் அதனையும் உடனடியாக சரி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

மேலும் கழிப்பிடங்களை சுழற்சி முறையில் சுத்தம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்களை எழுப்பினர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வடவள்ளி காவல்துறையினர் மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் பின்னர் மாணவர்களை அழைத்து கல்லூரி நிர்வாகம் பேச்சு வார்த்தை நடத்தியது.

அப்போது மாணவர்களின் கோரிக்கைகள் அனைத்திற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லூரி நிர்வாகம் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

திடீரென நடைபெற்ற இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...