கூடலூர் அருகே வலம் வரும் மக்னா யானை - வனத்திற்குள் விரட்ட 2 கும்கி யானைகள் வரவழைப்பு!

கூடலூர் அருகே பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வரும், மக்னா யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட முதுமலையிலிருந்து இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.



நீலகிரி: கூடலூர் அருகே விவசாய நிலங்களை சேதப்படுத்தி வரும் மக்னா யானையை விரட்ட வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் யானைகள் உணவு தேடி வனப்பகுதியிலிருந்து வெளியேறி ஊருக்குள் வருவது அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ஸ்ரீ மதுரை ஊராட்சிக்குட்பட்ட தேன் வயல், குளில் வயல், போஸ்பாரா போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே இரவு நேரங்களில் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய மக்னா யானை ஊருக்குள் வந்து, பயிர்களைச் சேதப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.



குறிப்பாக கடந்த இரண்டு நாட்களாக வனத்துறையினர் குழுக்களாகப் பிரிந்து இரவு, பகலாக அந்த ஒற்றை மக்னா யானையை கண்காணித்து வந்த நிலையில், அந்த யானையை விரட்ட முதுமலை யானைகள் முகாமிலிருந்து கணேசன் மற்றும் கிருஷ்ணா ஆகிய இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை கழிவுநீர் தொட்டியில் விழுந்த இரு ஒப்பந்த ஊழியர்களை மீட்க தீவிர முயற்சி

கோவை சாய்பாபா காலனியில் கழிவுநீர் உந்து நிலையத்தில் மோட்டார் பழுது பார்க்க இறங்கிய இரு மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் 40 அ...

SNR சன்ஸ் அறக்கட்டளை CEO C.V. ராம்குமாருக்கு மதிப்பு மிக்க தொழில் சேவை விருது

Rotary Club of Coimbatore Millennium மற்றும் Ramakrishna Matric Higher Secondary School Interact Club இணைந்து SNR சன்ஸ்...

கோவை-குவைத் இடையே நேரடி விமான சேவை ஏப்ரல் இறுதியில் தொடக்கம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து குவைத் நாட்டிற்கு Jazeera ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் ஏப்ரல் இறுதியில் நேரடி விமா...

கவுண்டம்பாளையம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சூர்யா பிரகாஷ் அறிவிப்பு

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியின் கீழ் போட்டியிடும் காங்கிரஸ் க...

ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் பெங்களூருவில் மாபெரும் சந்திப்பு

பெங்களூரு மடிவாலாவில் SRIT Alumni Connect 2K26 நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு துறைகள் மற்றும் ஆண்டுகளைச் சேர்ந்த 1...

சென்னை-கோவை விமானக் கட்டணம் ரூ.16,500 ஆக உயர்வு: தொடர் விடுமுறை காரணம்

புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக சென்னை-கோவை விமான கட்டணம் ரூ.4,966-இலிருந்து ரூ.16,496 ஆக பல...