கோரிக்கைகளை ஏற்றதால் முடிவுக்கு வந்த கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

கோவை சட்டக் கல்லூரியில் 3 மாணவர்கள் உரிய காரணம் இன்றி இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் கல்லூரி நிர்வாகம் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டதால் 24 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வந்த மாணவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது.


கோவை: கோவை சட்டக்கல்லூரி நிர்வாகம் மாணவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டதால் மாணவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது.

கோவை மருதமலை பகுதியில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் மாணவர்கள் ஷேக் முகமது மற்றும் அவரது மனைவி ஹரிதா. இந்த நிலையில், ஹரிதாவின் டிசி பிரச்சனை குறித்து கல்லூரி அலுவலர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாக வடவள்ளி காவல் நிலையத்தில் கல்லூரி நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டு இருவரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

மேலும் இரண்டாம் ஆண்டு பயின்று வரும் தரணீஸ் என்ற மாணவரும் உரிய விளக்கம் இன்றி இடைநீக்கம் செய்யப்பட்டதாக மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் உரிய காரணங்கள் இன்றி மூன்று மாணவர்களையும் சஸ்பெண்ட் செய்த கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து நேற்று மதியம் முதல் சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் இதனை காரணம் காட்டி மேற்கொண்டு எந்த மாணவர்கள் மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும், இது குறித்தான விசாரணைக் குழுவில் மாணவர்கள் தரப்பில் இருந்து மாணவர்களையும் நியமிக்க வேண்டும் எனவும் கோரிக்கையை முன் வைத்திருந்தனர்.



நேற்று இரவிலும் கல்லூரி வளாகத்திற்குள் மாணவர்களின் உள்ளிருப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது.



இந்நிலையில் இன்று காலையும் போராட்டம் நீடித்ததால் நிர்வாக காரணங்களுக்காக இன்று ஒரு நாள் பயிற்று வகுப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக கல்லூரி நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வடவள்ளி காவல் ஆய்வாளர், ஷேக் முகமது மற்றும் ஹாரிதா மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை குறித்து மாணவர்களின் கோரிக்கையுடன் காவல்துறை சார்பில் அனைத்து நடவடிக்கைகளும் விரைந்து எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.



மேலும் இது குறித்தான விசாரணைக் குழுவில் மாணவர்கள் சார்பாக மாணவர் பிரதிநிதி நிச்சயமாக இடம்பெறுவார் என கல்லூரி சார்பிலும் உறுதியளிக்கப்பட்டது.

இதனை அடுத்து 24 மணி நேரம் தொடர்ந்து நடந்து வந்த போராட்டம் தற்பொழுது முடிவுக்கு வந்தது. போராட்டத்தை மாணவர்கள் கைவிட்ட நிலையில் நாளை காலை முதல் கல்லூரி வழக்கம் போல் இயங்கும் என கல்லூரி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...