கோவையில் சாம்பல் புதன் தினம் - 40 நாள் நோன்பைத் தொடங்கிய கிறிஸ்தவ மக்கள்!

சாம்பல் புதன் தினத்தையொட்டி கோவையில் தூய மைக்கேல் பேராலயத்தில் நடைபெற்ற திருப்பலி ஆராதனையில் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் கலந்துகொண்டனர்.



கோவை: ஏசு கிறிஸ்துவை சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூறும் விதமாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் நோன்பிருந்து, வறியவர்களுக்கு உதவிகள் செய்வது வழக்கம். இந்த நாட்களை அவர்கள் ஆண்டுதோறும் தவக்காலமாக கடைபிடித்து வருகிறார்கள். இந்த தவக்காலம் சாம்பல் புதன் தினத்தில் இருந்து தொடங்குகிறது.



அதன்படி, இந்த ஆண்டுக்கான சாம்பல் புதன் இன்றைய தினம் கண்டறியப்பட்ட நிலையில், கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது. இதனையொட்டி கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்கள் அனைத்திலும் காலையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.



இந்த சிறப்பு திருப்பலியின்போது கிறிஸ்தவர்களின் நெற்றியில் சாம்பல் பூசப்படுகிறது. மனிதனே நீ மண்ணாக இருக்கிறாய், மண்ணுக்கே திரும்புவாய் என்பதன் அடையாளமாக இந்த சாம்பல் பூசப்படுவதாக கூறப்படுகிறது.



இதையொட்டி கோவை பெரிய கடை வீதி தூய மைக்கேல் பேராலயத்தில் திருப்பலி ஆராதனை நடைபெற்று அனைவரின் நெற்றியிலும் சாம்பல் பூசப்பட்டது. பேராலய பாதிரியார்கள் சிறப்பு திருப்பலி ஆராதனை மேற்கொண்டு அனைவரின் நெற்றியிலும் சாம்பலை பூசினர்.

இன்று துவங்கிய இந்த நோன்பானது ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் புனித வெள்ளி தினத்திற்கு அடுத்த சனிக்கிழமை வரை கடைபிடிக்கப்படும். புனித வெள்ளிக்கு பிறகு வரும் ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...