அன்னூர் - புளியம்பட்டி சாலையில் பைக் மீது கார் மோதல் - பாட்டி, பேரன் பலி!

அன்னூர் - புளியம்பட்டி சாலையில் பைக்கில் மூதாட்டியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது பின்னால் வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில், மூதாட்டி மற்றும் அவரது பேரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.


கோவை: அன்னூர் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் மூதாட்டி மற்றும் பேரன் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

கோவை அன்னூர் அய்யப்பரெட்டி புதூரை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் ஜெய்ராம் (12). அங்குள்ள தனியார் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வருகிறாரு. ரமேஷின் தாயார் வெள்ளையம்மாளுக்கு (98) உடல் நிலை சரியில்லாமல் இருந்துள்ளது.

இதனால் அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பைக்கில், அழைத்து செல்ல முடிவு செய்து, மூவரும் பைக்கில் சென்றுள்ளனர். இவர்கள் சென்ற பைக் அன்னூர்-புளியம்பட்டி சாலையில் உள்ள அண்ணா நகர் அருகே வந்தபோது, பின்னால் வேகமாக வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து பைக் மீது மோதியது.

இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து மூன்று பேரையும் மீட்டு, சிகிச்சைக்காக அன்னூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவன் ஜெய்ராமை பரிசோதனை செய்த, மருத்துவர்கள், சிறுவன் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மேலும் பலத்த காயம் அடைந்த வெள்ளையம்மாளுக்கு முதலுதவி, அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வெள்ளையம்மாளும் பரிதாபமாக இறந்தார். காயங்களுடன் ரமேஷ் அன்னூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்து குறித்து அன்னூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...