உடுமலை நகராட்சி சிறுவர் பூங்காவை திறக்க வேண்டும் - பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!

உடுமலை நகராட்சி யுஎஸ்எஸ் காலனி பகுதியில் 20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா, பணிகள் முடிந்து பல மாதங்களாகியும் திறக்கப்படாமல் உள்ளது. பூங்காவை மூக விரோதிகள் மதுகுடிக்கும் இடமாக மாற்றி வருவதாக மக்கள் குற்றச்சாட்டு.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பணிகள் முடிந்து திறக்கப்படாமல் உள்ள சிறுவர் பூங்காவை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட நான்காவது வார்டு யுஎஸ்எஸ் காலனி பகுதியில் அனுஷம் நகர், பாரதியார் காலனி, மதியழகன் நகர் உட்பட பல்வேறு குடியிருப்புகளில் சுமார் 2000க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றன.



பொதுமக்களின் கோரிக்கை ஏற்று இப்பகுதியில் கலைஞர் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் சிறுவர் பூங்கா யூ.எஸ்.எஸ் காலனி பகுதியில் அமைக்க முடிவு செய்யபட்டது. அதன்படி சிறுவர் பூங்கா பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆகியும் தற்போது வரை பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.



இதன் காரணமாக அப்பகுதி தற்போது, சமூக விரோதிகள் மதுகுடிக்கும் இடமாக மாற்றி வைத்துள்ளனர். மேலும் புதியதாக வாங்கிய விளையாட்டு உபகரணங்கள் சேதமாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.



இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு பல லட்சம் மதிப்பில் அமைக்கபட்ட சிறுவர் பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...