உடுமலை நகராட்சி சிறுவர் பூங்காவை திறக்க வேண்டும் - பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!

உடுமலை நகராட்சி யுஎஸ்எஸ் காலனி பகுதியில் 20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா, பணிகள் முடிந்து பல மாதங்களாகியும் திறக்கப்படாமல் உள்ளது. பூங்காவை மூக விரோதிகள் மதுகுடிக்கும் இடமாக மாற்றி வருவதாக மக்கள் குற்றச்சாட்டு.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பணிகள் முடிந்து திறக்கப்படாமல் உள்ள சிறுவர் பூங்காவை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட நான்காவது வார்டு யுஎஸ்எஸ் காலனி பகுதியில் அனுஷம் நகர், பாரதியார் காலனி, மதியழகன் நகர் உட்பட பல்வேறு குடியிருப்புகளில் சுமார் 2000க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றன.



பொதுமக்களின் கோரிக்கை ஏற்று இப்பகுதியில் கலைஞர் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் சிறுவர் பூங்கா யூ.எஸ்.எஸ் காலனி பகுதியில் அமைக்க முடிவு செய்யபட்டது. அதன்படி சிறுவர் பூங்கா பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆகியும் தற்போது வரை பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.



இதன் காரணமாக அப்பகுதி தற்போது, சமூக விரோதிகள் மதுகுடிக்கும் இடமாக மாற்றி வைத்துள்ளனர். மேலும் புதியதாக வாங்கிய விளையாட்டு உபகரணங்கள் சேதமாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.



இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு பல லட்சம் மதிப்பில் அமைக்கபட்ட சிறுவர் பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...