உடுமலையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் - கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம்

உடுமலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய உரிமைச் சட்டம் 2016 முறையாக அமலாக்கம் செய்ய வேண்டும், மாநில அரசு அறிவித்த 1500 ரூபாயும், கடுமையான மாற்றுத்திறனாளிகளுக்கு 2000ரூபாயும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தல்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமையாளர்களுக்கான சங்கம் சார்பில் மாவட்ட பொறுப்பாளர் மாலினி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய உரிமைச் சட்டம் 2016 முறையாக அமலாக்கம் செய்ய வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு மாநில அரசு அறிவித்த 1500 ரூபாயும், கடுமையான மாற்றுத்திறனாளிகளுக்கு 2000 ரூபாயும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும், மாற்று திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.



100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நான்கு மணி நேரம் மற்றும் வேலை வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க் கூட்டம் வருவாய் கோட்டாச்சியர் தலைமையில் இரண்டு மாதத்துக்கு ஒரு முறை நடத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் வேலை தெரிந்தவர்களுக்கு தையல் இயந்திரம் இலவசமாக வழங்க வேண்டும்.



காவல் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகள் புகார் மனுக்கள் மீது மாற்றுத்திறனாளிகள் சட்டப்படி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை போராட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் ராஜேஷ், சிஐடியு ஜெகதீஷ், கனகராஜ், ரங்கநாதன் உட்பட நூற்றுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...

கோவை கல்லூரி மாணவர் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் க...