உடுமலையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் - கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம்

உடுமலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய உரிமைச் சட்டம் 2016 முறையாக அமலாக்கம் செய்ய வேண்டும், மாநில அரசு அறிவித்த 1500 ரூபாயும், கடுமையான மாற்றுத்திறனாளிகளுக்கு 2000ரூபாயும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தல்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமையாளர்களுக்கான சங்கம் சார்பில் மாவட்ட பொறுப்பாளர் மாலினி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய உரிமைச் சட்டம் 2016 முறையாக அமலாக்கம் செய்ய வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு மாநில அரசு அறிவித்த 1500 ரூபாயும், கடுமையான மாற்றுத்திறனாளிகளுக்கு 2000 ரூபாயும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும், மாற்று திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.



100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நான்கு மணி நேரம் மற்றும் வேலை வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க் கூட்டம் வருவாய் கோட்டாச்சியர் தலைமையில் இரண்டு மாதத்துக்கு ஒரு முறை நடத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் வேலை தெரிந்தவர்களுக்கு தையல் இயந்திரம் இலவசமாக வழங்க வேண்டும்.



காவல் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகள் புகார் மனுக்கள் மீது மாற்றுத்திறனாளிகள் சட்டப்படி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை போராட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் ராஜேஷ், சிஐடியு ஜெகதீஷ், கனகராஜ், ரங்கநாதன் உட்பட நூற்றுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...