வால்பாறை அரசு மருத்துவமனையில் முதல் அறுவைசிகிச்சை - வெற்றிகரமாக செய்த மருத்துவர்கள் குழு!

சாலை விபத்தில் எலும்பு முறிவு ஏற்பட்ட இளம்பெண்ணுக்கு, கோவை மாவட்டம் வால்பாறை அரசு மருத்துவமனையில் முதல் முறையாக மருத்துவர்கள் சரண், சதிஷ் தலைமையிலான குழு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்துள்ளது.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது.



வால்பாறையில் உள்ள 62 எஸ்டேட்டுகளில் உள்ள அனைத்து பொதுமக்களும் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சைபெற்று செல்கின்றனர்.

இம்மருத்துவமனையில் நீண்ட நாளாக அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை பொள்ளாச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வந்தனர்.



இந்த நிலையில் தற்போது முதல் முறையாக சாலை விபத்தில் எலும்பு முறிவு ஏற்பட்ட 18 வயது பெண்ணிற்கு வால்பாறையில் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது.

எலும்பு முறிவு மருத்துவர் சரண், மயக்கவியல் நிபுணர் டாக்டர் சதீஷ் ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழு இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மருத்துவர்களின் இந்த முயற்சிக்கு அப்பகுதி மக்கள் நன்றியும், வரவேற்பும் தெரிவித்துள்ளனர்.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...