வால்பாறை சாலைகளில் உலாவரும் சுள்ளிக் கொம்பன் யானை - வாகன ஓட்டிகள் அச்சம்!

வால்பாறையில் காலை மற்றும் மாலை நேரங்களில் சுள்ளிக் கொம்பன் என்னும் ஒற்றைக் காட்டுயானை, குடியிருப்பு பகுதிகளில் உலா வருவதால் பொதுமக்கள் அச்சம். யானையை வனத்திற்குள் விரட்டியடிக்கும்படி மக்கள் கோரிக்கை.



கோவை: ஆனைமலை புலிகள் காப்பகம் வால்பாறை பொள்ளாச்சி வனச்சரகத்துக்கு கேரளா வனப்பகுதியில் இருந்து சில வாரங்களுக்கு முன்பு வந்த ஒற்றைக் காட்டு யானை சுள்ளிக் கொம்பன் தொடர்ந்து சில நாட்களாகவே காலை மற்றும் மாலை நேரங்களில் வால்பாறை பொள்ளாச்சி சாலையில் உலா வந்து கொண்டிருக்கிறது.



மேலும் ஆழியார் அணையின் கரையோரம் பகுதிகளில் உலா வந்து யானை சாலை வழியாக ஆழியாரில் இருந்து வால்பாறை சாலை 1வது கொண்டை ஊசி வளைவுவரை வந்து செல்கிறது.



இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்து உள்ளனர்.



மேலும், நவமலை மின்சார வாரிய ஊழியர்கள் இருக்கும் பகுதிக்கும் அடிக்கடி சென்று அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.



இதனையடுத்து, இப்பகுதி பொதுமக்கள் யானையை அடர்ந்த வனப்பகுதியில் விரட்டி, உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.



வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் ஒற்றை காட்டு யானை நடமாட்டம் உள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாகவும் பாதுகாப்புடனும் செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...