வால்பாறை சாலைகளில் உலாவரும் சுள்ளிக் கொம்பன் யானை - வாகன ஓட்டிகள் அச்சம்!

வால்பாறையில் காலை மற்றும் மாலை நேரங்களில் சுள்ளிக் கொம்பன் என்னும் ஒற்றைக் காட்டுயானை, குடியிருப்பு பகுதிகளில் உலா வருவதால் பொதுமக்கள் அச்சம். யானையை வனத்திற்குள் விரட்டியடிக்கும்படி மக்கள் கோரிக்கை.



கோவை: ஆனைமலை புலிகள் காப்பகம் வால்பாறை பொள்ளாச்சி வனச்சரகத்துக்கு கேரளா வனப்பகுதியில் இருந்து சில வாரங்களுக்கு முன்பு வந்த ஒற்றைக் காட்டு யானை சுள்ளிக் கொம்பன் தொடர்ந்து சில நாட்களாகவே காலை மற்றும் மாலை நேரங்களில் வால்பாறை பொள்ளாச்சி சாலையில் உலா வந்து கொண்டிருக்கிறது.



மேலும் ஆழியார் அணையின் கரையோரம் பகுதிகளில் உலா வந்து யானை சாலை வழியாக ஆழியாரில் இருந்து வால்பாறை சாலை 1வது கொண்டை ஊசி வளைவுவரை வந்து செல்கிறது.



இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்து உள்ளனர்.



மேலும், நவமலை மின்சார வாரிய ஊழியர்கள் இருக்கும் பகுதிக்கும் அடிக்கடி சென்று அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.



இதனையடுத்து, இப்பகுதி பொதுமக்கள் யானையை அடர்ந்த வனப்பகுதியில் விரட்டி, உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.



வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் ஒற்றை காட்டு யானை நடமாட்டம் உள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாகவும் பாதுகாப்புடனும் செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...