வடமாநில தொழிலாளர் வருகையை கட்டுப்படுத்துக..! - பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம்!

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் அதிகரித்து வரும் வடமாநில தொழிலாளர்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்தகோரி, பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தை தென்னை விவசாய கூலி தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: வடமாநில தொழிலாளர் வருகையை கட்டுப்படுத்த கோரி கோவை மாவட்டம் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தை விவசாய கூலி தொழிலாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் தென்னை விவசாயம் பிரதானமாக செய்யப்பட்டு வருகிறது. இதை நம்பி மரம் ஏறும் தொழிலாளர்கள், தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள், தென்னை நார் தொழில்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் என பல்லாயிரக் கணக்கானோர் வாழ்வாதாரத்தை பெற்று வருகின்றனர்.



இந்நிலையில், வட மாநிலத்தவர்களின் வருகையின் காரணமாக தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி இன்று தமிழ்நாடு தென்னை தொழிலாளர் பேரவை மற்றும் தென்னை விவசாயக் கூலி தொழிலாளர்கள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது வடமாநில தொழிலாளர்களின் வருகையை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும், வடமாநில தொழிலாளர்களை உடனடியாக அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

குறைந்த கூலிக்கு வெளி மாநில தொழிலாளர்களை பயன்படுத்துவதால் தென்னை தொழில் உள்ளிட்ட அனைத்து தொழில்களில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான தமிழக தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளதாகவும், வட மாநிலத்தவர்கள் நிரந்தரமாக தங்கி வேலை செய்வதால் இங்குள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர்.

மேலும் இந்த போராட்டத்தின் போது, வட மாநில தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப வேண்டும், தென்னை தொழிலாளர்களுக்கு ஊதிய நிர்ணயம், PF, ESI பிடித்தம் செய்ய வேண்டும். பணி பாதுகாப்பு மருத்துவ காப்பீடு செய்து தர வேண்டும், தென்னை தொழிலாளர்கள் நல வாரியம் அமைத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.



இந்த முற்றுகை போராட்டம் காரணமாக பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் சில மணி நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...