நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி போராட்டம் - பரபரப்பு

கோத்தகிரியை சேர்ந்த யாகூப் என்ற மாற்றுத்திறனாளி காந்தி மைதானம் அருகே தனக்காக ஒதுக்கப்பட்ட கடை வேறு ஒருவருக்கு வழங்கப்பட்டதாக பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், ஆட்சியர் அலுவலகத்தில் படுத்து தர்ணா போராட்டம்.


நீலகிரி: தனக்காக ஒதுக்கப்பட்ட கடை வேறு ஒருவருக்கு வழங்கப்பட்டதை கண்டித்து மாற்றுத்திறனாளி ஒருவர், நீலகிரி ஆட்சியர் அலுவலகத்தில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோத்தகிரியில் வசித்து வருபவர் முகமது யாகூப். மாற்று திறனாளியான இவர், கோத்தகிரி பேருந்து நிலையத்திற்கு அருகில் தள்ளு வண்டியில் சிற்றுண்டி கடை வைத்து நடத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு பேரூராட்சியின் செயல் அலுவலர், இவரது கடையை காந்தி மைதானம் அருகே உள்ள பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் நடத்திக் கொள்ளுமாறு உத்தரவிட்டிருந்தார்.

இதனை நம்பி யாகூப் தன்னுடைய கடையை காந்தி மைதானம் அருகில் நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் கடையை மாற்றம் செய்வதற்காக அங்கு சென்று பார்த்த பொழுது தனக்கு ஒதுக்கிய இடத்தை வேறு ஒருவருக்கு கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது.



இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த யாகூப் மாவட்ட ஆட்சியரை அணுகி பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் அருகே படுக்கை விரிப்பு மற்றும் கம்பளியுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.



இதனை அடுத்து அங்கு வந்த காவல்துறையினர் அவரிடம் பேசி சமாதானம் செய்து சம்பந்தப்பட்ட அலுவலருக்கு தொடர்பு கொண்டு கடை கிடைப்பதற்கு உண்டான வழி ஏற்படுத்தி தரப்படும் என உறுதி அளித்ததின் பேரில் யாகூப் அங்கிருந்து திரும்பிச் சென்றார்.

இச்சம்பவம் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...