கோவை - சொக்கம்புதூர் மாசாணியம்மன் கோயில் மாசித் திருவிழா

கோவை சொக்கம்புதூரில் மாசாணியம்மன் கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற குண்டம் இறங்கும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


கோவை: கோவை சொக்கம்புதூர் செல்லப்பாபுரம் பகுதியில் உள்ள மகாசக்தி மாசாணியம்மன் கோவில் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. மாசி மாதத்தை முன்னிட்டு கடந்த பத்தாம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

இதன் ஒரு பகுதியாக, மகா சிவராத்திரியை முன்னிட்டு சனிக்கிழமை நள்ளிரவு மயான பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, நேற்று சத்தி கரகம் அழைத்து வருதல் மற்றும் பூக்குண்டம் இறங்கும் நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு தீமிதித்து நேர்த்திக்கடன் செய்தனர்.



அதனைத் தொடர்ந்து, இன்று மதியம் 12 மணியளவில் உச்சிக்கால பூஜை நடைபெற்ற மகாமுனி பூஜை மற்றும் அன்னதான நிகழ்வு நடைபெற உள்ளது. இந்த திருவிழா வருகின்ற 26ம் தேதி சிறப்பு அபிஷேக பூஜை உடன் முடிவடைகிறது.



இந்நிகழ்வில், கோவிலின் தர்மகர்த்தா லட்சுமி நாராயணன், பொருளாளர் ஆனந்தன், செயலாளர் துரைராஜ் உட்பட குடும்ப பெரியவர்கள் கிருஷ்ணன், கதிர்வேல், வேணுகோபால் மற்றும் அறங்காவலர்கள் பாலசுந்தரம், பழனிசாமி, மதனகோபால், உமா காந்தன், சுகுமார், செந்தில், ஜனார்த்தனன் மற்றும் கோவில் பூசாரிகள் சிவஞானம், சதீஷ்குமார், லோகசந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...