சிரியா, துருக்கிக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைத்த திருப்பூர் இஸ்லாமியர்கள்!

துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் திருப்பூரில் இருந்து ஆல் இந்தியா கேரளா முஸ்லிம் கல்ச்சுரல் சென்டர் மூலம் ரூ.5 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.



திருப்பூர்: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியா மக்களுக்கு உதவும் வகையில் திருப்பூரில் இருந்து 5 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்குள்ள மக்கள் வாழ்வாதாரத்தை இழந்தும் உடமைகளை இழந்தும் தவித்து வருகின்றனர்.



இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் ஆல் இந்தியா கேரளா முஸ்லிம் கல்ச்சுரல் சென்டர் திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பின்னலாடை பொருட்கள் அனுப்பப்பட்டது.



திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஆல் இந்தியா கேரளா முஸ்லிம் கல்ச்சுரல் சென்டர் தலைமை அலுவலகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை சாபிக் அலி சிகாபுத்தங்கள் துவக்கி வைத்தார்.

இந்த நிவாரண பொருட்கள் முதல் கட்டமாக இங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டு டெல்லியில் உள்ள தூதரகத்தில் ஒப்படைக்கப்படும் என்றும் இது முதல் கட்டமான நிகழ்வு என்றும் தொடர்ந்து துருக்கி, சிரியா மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை உதவி பொருட்களை அனுப்பப்படும்.

இவ்வாறு இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...