சிரியா, துருக்கிக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைத்த திருப்பூர் இஸ்லாமியர்கள்!

துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் திருப்பூரில் இருந்து ஆல் இந்தியா கேரளா முஸ்லிம் கல்ச்சுரல் சென்டர் மூலம் ரூ.5 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.



திருப்பூர்: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியா மக்களுக்கு உதவும் வகையில் திருப்பூரில் இருந்து 5 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்குள்ள மக்கள் வாழ்வாதாரத்தை இழந்தும் உடமைகளை இழந்தும் தவித்து வருகின்றனர்.



இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் ஆல் இந்தியா கேரளா முஸ்லிம் கல்ச்சுரல் சென்டர் திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பின்னலாடை பொருட்கள் அனுப்பப்பட்டது.



திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஆல் இந்தியா கேரளா முஸ்லிம் கல்ச்சுரல் சென்டர் தலைமை அலுவலகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை சாபிக் அலி சிகாபுத்தங்கள் துவக்கி வைத்தார்.

இந்த நிவாரண பொருட்கள் முதல் கட்டமாக இங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டு டெல்லியில் உள்ள தூதரகத்தில் ஒப்படைக்கப்படும் என்றும் இது முதல் கட்டமான நிகழ்வு என்றும் தொடர்ந்து துருக்கி, சிரியா மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை உதவி பொருட்களை அனுப்பப்படும்.

இவ்வாறு இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...