வால்பாறை சோலையாறு அணையின் நீர் மட்டம் சரிவு - சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள சோலையாறு அணைக்கு நீர்வரத்து 30 கன அடியாகவும், அணையின் நீர் இருப்பு 604 கனஅடியாகவும் உள்ளது. விவசாயத்திற்கான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் முக்கிய நீர்பிடிப்பு பகுதியான சோலையாறு அணை 160 அடி உயரம் உள்ளது. அணையில் 5 டி.எம்.சி தண்ணீர் சேகரிக்கப்படும். இதில் அணையின் உபரி நீர் சேடல் வழியாக மானாம்பள்ளி மின் உற்பத்தி நிலையத்தில் 74 வாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அதன்பின் தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு சென்று ஆழியார் அணை மற்றும் அமராவதி அணைக்கு தண்ணீர் செல்கிறது.



சோலையாறு அணை தண்ணீர் சுமார் 2 லட்சம் ஏக்கர் விவசாயத்திற்கு பயன்படுகிறது. தற்போது, கோடைகாலம் என்பதால் மழை இல்லாமல் ஆற்றில் தண்ணீர் வற்றிபோய் காணப்படுகிறது. அணைக்கு நீர் வரத்து குறைந்து உள்ளது. தற்போது, அணைக்கு நீர்வரத்து 30 கன அடியாகவும், 5 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட அணையில் தற்போது 604 கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.



இதனால், அணையில் தண்ணீர் வற்றிபோய் மண் திட்டுக்கள் காணப்படுகிறது. சோலையாறு அணை தண்ணீர் இல்லாமல் வரண்டு காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். அணையின் நீர் மட்டம் சரிவால், விவசாயத்திற்கான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...