வால்பாறை சோலையாறு அணையின் நீர் மட்டம் சரிவு - சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள சோலையாறு அணைக்கு நீர்வரத்து 30 கன அடியாகவும், அணையின் நீர் இருப்பு 604 கனஅடியாகவும் உள்ளது. விவசாயத்திற்கான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் முக்கிய நீர்பிடிப்பு பகுதியான சோலையாறு அணை 160 அடி உயரம் உள்ளது. அணையில் 5 டி.எம்.சி தண்ணீர் சேகரிக்கப்படும். இதில் அணையின் உபரி நீர் சேடல் வழியாக மானாம்பள்ளி மின் உற்பத்தி நிலையத்தில் 74 வாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அதன்பின் தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு சென்று ஆழியார் அணை மற்றும் அமராவதி அணைக்கு தண்ணீர் செல்கிறது.



சோலையாறு அணை தண்ணீர் சுமார் 2 லட்சம் ஏக்கர் விவசாயத்திற்கு பயன்படுகிறது. தற்போது, கோடைகாலம் என்பதால் மழை இல்லாமல் ஆற்றில் தண்ணீர் வற்றிபோய் காணப்படுகிறது. அணைக்கு நீர் வரத்து குறைந்து உள்ளது. தற்போது, அணைக்கு நீர்வரத்து 30 கன அடியாகவும், 5 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட அணையில் தற்போது 604 கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.



இதனால், அணையில் தண்ணீர் வற்றிபோய் மண் திட்டுக்கள் காணப்படுகிறது. சோலையாறு அணை தண்ணீர் இல்லாமல் வரண்டு காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். அணையின் நீர் மட்டம் சரிவால், விவசாயத்திற்கான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...