கோவை பேரூர் பட்டிஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி விழா - விடிய விடிய சிறப்பு பூஜை!

கோவையை அடுத்த பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தீபவிளக்கு ஏற்றி வழிபட்டனர்.



கோவை: மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு பேரூர் பட்டீஸ்வரர் கோவில் மின்னொளியில் ஜொலித்தது.

இந்து அறநிலையத் துறை சார்பில் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற 5 சிவாலயங்களில் சிவராத்திரியைச் சிறப்புப் பூஜை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து பேரூர் பட்டீஸ்வர் திருத்தலத்தில் சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கிய பக்தர்களின் பரவசம் விடிய விடிய நீடித்து இன்று காலை 6 மணி வரை தொடர்ந்தது.

சிவராத்திரி நிகழ்வில், இரவு 9 மணி முதல் 11 மணி வரை முதற்கால பூஜை, 11 மணி முதல் நள்ளிரவு 1மணி வரை இரண்டாம் கால பூஜை, நள்ளிரவு1 முதல் அதிகாலை 3 மணி வரை மூன்றாம் கால பூஜை, அதிகாலை 3 மணி முதல் 4.30 நான்காம் கால பூஜை நடைபெற்றது.

சிவராத்திரியை முன்னிட்டு பல்வேறு விசேஷ நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. நேற்று மாலை 6 மணிக்கு திருக்கோவில் நாதஸ்வர கலைஞர்களின் மங்கள இசை, தவில் இசை, நாதஸ்வரம் இசைக்கப்பட்டன. மாலை 6.15 மணிக்கு கோவை மாவட்ட திருக்கோவில் ஓதுவார்கள் திருமுறை விண்ணப்பம் நடந்தன.

இதைத்தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு குத்துவிளக்கேற்றி விழா ஆரம்பமானது. பேரூராதீனம் சாந்தலிங்க மருதாலச் அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுரு அடிகளார் ஆகியோர் ஆன்மிக அருளுரை வழங்கினார்.



இரவு 7.15 மணிக்கு வழுவூர் பழனியப்பன் குழுவினர் பரதநாட்டிய நிகழ்ச்சியும்.



இரவு 7.45 சிவகண வாத்திய குழுவினர் கயிலை வாத்தியமும் நடந்தது. இரவு 8 மணிக்கு ஆன்மீக சொற்பொழிவாளர் சுகி சிவம் தலைமையில் பக்தி நெறியை பெரிதும் வளர்ப்பவர்கள் பெண்களா?, ஆண்களா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது.

இரவு 9.30 மணிக்கு திரைப்பட பின்னணி பாடகர் கானா உலகநாதன், தஞ்சை நாட்டுப்புற பாடகி செல்வி, டி.வி.சண்முகம் வழங்கும் கோவை பிரியா இசைக்குழு பக்தி இன்னிசை கச்சேரி நடந்தது. இரவு 11.30 நண்பர்கள் கலைக்குழு ஸ்ரீதர் தலைமையில் வெங்கலம், பம்பை, காவடி, கை சிலம்பாட்ட கிராமிய இசை நிகழ்ச்சி நடந்தது.



இரவு 12.30 மணிக்கு சென்னை சாய் நிருத்தியாலயா வழங்கும் அரணும், அங்கயற்கண்ணியும் நாட்டிய நாடகம், அதைத் தொடர்ந்து நள்ளிரவு 1.30 மணிக்கு சுசித்ரா குழுவின் பக்தி இன்னிசை, இரவு 2.30 மணிக்கு திருப்பூர் மூலனூர் சாந்தகுமாரின் மின்னல் கிராமியக் கலைக் குழு பறை இசை, தீ விளையாட்டு, அதிகாலை 3.30 மணி முதல் காலை 6 மணி வரை சூப்பர் சிங்கர் ராஜ கணபதி, சரத் சந்தோஷ், தீப்தி சுரேஷ், ஸ்ரீஷா பாட்டுக்கச்சேரி ஆகியன பேரூர் சாந்தலிங்க அடிகளார் பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் நடந்தது.



சிவராத்திரி வழிபாட்டை முன்னிட்டு பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் தீப விளக்குகள் ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர்.



இந்த நிலையில் பேரூர் பட்டீஸ்வரர் கோயில் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பட்டீஸ்வரர் கோயில் திருத்தலமே வண்ண விளக்கால் ஜொலித்தன.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...