கோவை பன்னிமடை அருகே போர்வெல் குழாய்களை உடைத்து சேதப்படுத்திய காட்டு யானை - பரபரப்பு!

பன்னிமடையை அடுத்த வரப்பாளையம் பிரிவு பகுதியில் உள்ள வாழை தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டுயானை, போர்வெல் குழாய்கள், வாழை மற்றும் தென்னை மரங்களை சேதப்படுத்தியதால் பரபரப்பு.


கோவை: கோவை மாவட்டம் பன்னிமடை அருகே வாழை தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை போர்வெல் குழாய்களை சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



ஆனைகட்டி மலைப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இந்த யானைகள் உணவு தேடி மலையடிவார பகுதிகளான மாங்கரை, தடாகம், பன்னிமடை, வரப்பாளையம் உள்ளிட்ட பகுதியில் உள்ள தோட்டங்களுக்கு அடிக்கடி வருகின்றன.

இந்த நிலையில் நேற்று இரவு பன்னிமடையை அடுத்த வரப்பாளையம் பகுதியில் உள்ள கணேஷ் என்பவரது தோட்டத்திற்குள் ஒற்றை காட்டு யானை புகுந்துள்ளது.



தோட்டத்தில் இருந்த போர்வெல் பைப்புகள், பில்டர் பைப்புகளை உடைத்த காட்டு யானை, 10க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் மற்றும் தென்னை மரங்களையும் சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளது.



இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர், யானையை காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.



இச்சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...