கோவை பன்னிமடை அருகே போர்வெல் குழாய்களை உடைத்து சேதப்படுத்திய காட்டு யானை - பரபரப்பு!

பன்னிமடையை அடுத்த வரப்பாளையம் பிரிவு பகுதியில் உள்ள வாழை தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டுயானை, போர்வெல் குழாய்கள், வாழை மற்றும் தென்னை மரங்களை சேதப்படுத்தியதால் பரபரப்பு.


கோவை: கோவை மாவட்டம் பன்னிமடை அருகே வாழை தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை போர்வெல் குழாய்களை சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



ஆனைகட்டி மலைப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இந்த யானைகள் உணவு தேடி மலையடிவார பகுதிகளான மாங்கரை, தடாகம், பன்னிமடை, வரப்பாளையம் உள்ளிட்ட பகுதியில் உள்ள தோட்டங்களுக்கு அடிக்கடி வருகின்றன.

இந்த நிலையில் நேற்று இரவு பன்னிமடையை அடுத்த வரப்பாளையம் பகுதியில் உள்ள கணேஷ் என்பவரது தோட்டத்திற்குள் ஒற்றை காட்டு யானை புகுந்துள்ளது.



தோட்டத்தில் இருந்த போர்வெல் பைப்புகள், பில்டர் பைப்புகளை உடைத்த காட்டு யானை, 10க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் மற்றும் தென்னை மரங்களையும் சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளது.



இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர், யானையை காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.



இச்சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

தாய்லாந்து சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில் கோவை சிறுவன் ரக்‌ஷனுக்கு 2-ம் இடம்

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில், இந்தியா சார்பில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற ஒரே போட்டியாளராக ‌...

மோசடி வழிகளில் நடைபெறும் மதமாற்றத்தைத் தடுக்க சட்டம் தேவை: கோவையில் VHP பொதுச்செயலாளர் மிலிந்த் பரந்தே

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) சார்பில் நடைபெற்ற இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழாவில் பங்கேற்ற மிலிந்த் பரந்தே, கோயி...

வாட்ஸ்-அப் மூலம் கேரளா லாட்டரி சூதாட்டம்: உக்கடத்தில் வாலிபர் கைது; 2 ஸ்மார்ட்போன்கள் பறிமுதல்

கோவை உக்கடம் புதிய பஸ் நிலைய கழிப்பறை அருகே வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் கேரளா லாட்டரி எண்களை விற்பனை செய்து சட்டவிரோதமாக...

சித்தாபுதூரில் பணம் வைத்து சூதாட்டம்: 6 பேர் கைது; 159 சீட்டுகள், ரூ.3,700 பறிமுதல்

கோவை சித்தாபுதூர் என்.ஜி.என். தெருவில் பணம் வைத்து சட்டவிரோதமாக சீட்டாடியதாகக் கூறப்படும் 6 பேரை காட்டூர் போலீசார் கைது...

Park Institutions Students Gain Practical Cybersecurity Exposure

Park Institutions organised a seminar on Enterprise Vulnerability Management, providing 150 students from the Computer S...

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...