கோவை வெள்ளலூரில் ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

வெள்ளலூர் பகுதியை சேர்ந்த மோகன் குமார் என்ற இளைஞர் படித்துவிட்டு வேலையில்லாமல் தவித்து வந்த நிலையில், ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி, மன உளைச்சல் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.



கோவை: கோவை மாவட்டம் வெள்ளலூர் அருகே ஆன்லைன் ரம்மிக்கு அடிமையான பட்டதாரி இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளலூர் பகுதியை சேர்ந்தவர் மோகன் குமார் (25). இவர் பி.எஸ்.சி ஐ.டி படித்துவிட்டு சரியான வேலை இல்லாததால் வீட்டில் இருந்து வந்துள்ளார். வேலையில்லாத சூழலில் மோகன் குமார் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இறங்கி அடிமையாகியுள்ளார்.

தொடர்ந்து செல்போனை பார்த்து விளையாடி வந்ததால் இளைஞர் மோகன் குமாருக்கு நீண்ட நாட்களாக தலைவலி மற்றும் பார்வை குறைபாடு இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் மிகுந்த மன உளைச்சலில் இருந்த வந்த அவர், நேற்று தனது வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக போத்தனூர் போலீசார் சந்தேக மரண வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்து மன உளைச்சலுக்கு ஆளாகி ஏற்கனவே பலர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், கோவையில் மேலும் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...