கோடை வெப்பம் அதிகரிப்பு - உடுமலையில் மண்பானை விற்பனை அமோகம்

உடுமலையில் கூஜா, ஜாடி, உருண்டை வடிவ பழைய செம்பு, பானை வடிவத்திலான மண்பானை, குழாய் பொருத்திய மண்பானை விற்பனை. 10 லிட்டர் முதல் 30 லிட்டர் கொள்ளளவு மற்றும் வடிவம் அடிப்படையில் 250 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விற்கப்படுகிறது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால், குடிநீரை குளிர்ச்சியாக குடிக்க விரும்பும் பொதுமக்கள், தற்போது மண்பானைகளை அதிக அளவில் வாங்கத் தொடங்கியுள்ளனர். இதனால், மண்பானைகளின் விற்பனை தற்போது சூடுபிடித்துள்ளதால், உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.



இந்த தண்ணீர் பானைகள் கூஜா, ஜாடி, உருண்டை வடிவ பழைய செம்பு, பானை வடிவத்திலான மண்பானை, குழாய் பொருத்திய மண்பானை என பல்வேறு வடிவங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. 10 லிட்டர் முதல் 30 லிட்டர் கொள்ளளவு கொண்ட பானைகள், வடிவம் மற்றும் கொள்ளளவு அடிப்படையில் 250 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.



இது குறித்து மண்பானை விற்பனையாளர்கள் கூறுகையில், வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் வீடு, அலுவலகம் மற்றும் நிறுவனங்களுக்கு என மக்கள் அதிக அளவில் மண்பானைகள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். நாளொன்றுக்கு 100 பானைகள் விற்பனையாகிறது. இதனால் வருமானமும் அதிகரித்துள்ளது, என்றனர்.

Newsletter

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...

கோவையில் ரோட்டராக்ட் கிளப் ஆஃப் கோவை நைட்ஸ் சார்பில் ARENA ஸ்போர்ட்ஸ் மீட்

கோவை வெங்கிட்டாபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கமல்நாதன் நினைவு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், தேசிய விளையாட்டு தினத்தை மு...

கோவை வார்டுகள் 12, 13-ல் வளர்ச்சிப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.12 மற்றும் 13க்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் தொட...

காணியாளம்பாளையம் MIRA HOMES பகுதியில் ஈக்கள் தொல்லை: உடனடி நடவடிக்கை கோரி மனு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட காணியாளம்பாளையம் MIRA HOMES DTCP அப்ரூவல் வீட்டுமனை பகுதி...