கோடை வெப்பம் அதிகரிப்பு - உடுமலையில் மண்பானை விற்பனை அமோகம்

உடுமலையில் கூஜா, ஜாடி, உருண்டை வடிவ பழைய செம்பு, பானை வடிவத்திலான மண்பானை, குழாய் பொருத்திய மண்பானை விற்பனை. 10 லிட்டர் முதல் 30 லிட்டர் கொள்ளளவு மற்றும் வடிவம் அடிப்படையில் 250 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விற்கப்படுகிறது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால், குடிநீரை குளிர்ச்சியாக குடிக்க விரும்பும் பொதுமக்கள், தற்போது மண்பானைகளை அதிக அளவில் வாங்கத் தொடங்கியுள்ளனர். இதனால், மண்பானைகளின் விற்பனை தற்போது சூடுபிடித்துள்ளதால், உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.



இந்த தண்ணீர் பானைகள் கூஜா, ஜாடி, உருண்டை வடிவ பழைய செம்பு, பானை வடிவத்திலான மண்பானை, குழாய் பொருத்திய மண்பானை என பல்வேறு வடிவங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. 10 லிட்டர் முதல் 30 லிட்டர் கொள்ளளவு கொண்ட பானைகள், வடிவம் மற்றும் கொள்ளளவு அடிப்படையில் 250 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.



இது குறித்து மண்பானை விற்பனையாளர்கள் கூறுகையில், வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் வீடு, அலுவலகம் மற்றும் நிறுவனங்களுக்கு என மக்கள் அதிக அளவில் மண்பானைகள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். நாளொன்றுக்கு 100 பானைகள் விற்பனையாகிறது. இதனால் வருமானமும் அதிகரித்துள்ளது, என்றனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...