தாராபுரம் சின்னக்காளி அம்மன் கோயிலில் குத்துவிளக்கு பூஜை - ஆர்வத்துடன் பங்கேற்ற பெண்கள்!

தாராபுரத்தில் உள்ள தென்தாரை ஸ்ரீசின்னக்காளியம்மன் கோயிலில் தமிழகத்தில் நல்ல மழை பெய்து, கோடைவெயிலின் தாக்கம் குறைந்திடவும், அனைத்து உயிர்களுக்கும் தட்டுப்பாடு இல்லாமல் குடிதண்ணீர் கிடைக்ககோரி பஜனை பாடல்களுடன் தீப அலங்காரம் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தென்தாரை அருள்மிகு ஸ்ரீ, சின்னக்காளி காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு 8வது ஆண்டாக 108 குத்துவிளக்கு 'பூஜை நடைபெற்றது.

சின்ன காளியம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்ற குத்து விளக்கு பூஜைக்கு ராஜா (என்ற) கோவிந்தசாமி தலைமை வகித்தார். வ.உ.சி. பேரவைத்தலைவர் உலகநாதன், மணிகண்டன், சிவா, கார்த்தி, பாலு, சரவணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



இந்த நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். குத்து விளக்கு பூஜையில் உலகில் அன்பு அமைதி நிலவளம் வேண்டியும், தமிழகத்தில் நல்ல மழை பெய்து, கோடைவெயிலின் தாக்கம் குறைந்திடவும்,கொரோனா நோய் தொற்றிலிருந்து பொதுமக்கள் மீண்டு வரவும் அனைத்து உயிர்களுக்கும் தட்டுப்பாடு இல்லாமல் குடிதண்ணீர் கிடைத்திட வேண்டியும்,



விவசாயம் செழித்து அனைவரும் நலமுடன் வாழ வேண்டியும் பஜனை பாடல்களுடன் தீப அலங்காரம் நடைபெற்றது. பின்னர் நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...