கோடையின் தாக்கம் எதிரொலி - வேகமாகச் சரியும் அமராவதி அணை நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகிலுள்ள அமராவதி அணையில் மொத்தமுள்ள 90 அடியில், காலை நிலவரப்படி 63.78 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 43 கனஅடி நீர் வந்துகொண்டுள்ளது. அணையிலிருந்து, 300 அடி நீர் வெளியேற்றபட்டுவருகிறது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள, 53,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனம், கல்லாபுரம், ராமகுளம், கொமரலிங்கம், கண்ணா டிபுத்துார், சோழமாதேவி, கணியூர், கடத்துார், காரத் தொழுவு ஆகிய பகுதியில் 7,520 ஏக்கர் நிலங்களுக்கு இரண்டாம் பருவ நெல் சாகுபடிக்கு நீர் வழங்கப்பட்டு வருகிறது.



அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்தில், திருப்பூர், கரூர் மாவட்டங்களில், தாராபுரம், கரூர் ஆகிய மாவட்டங்களின் பாசனப்பகுதிகளும் கட்டுப்பட்டுள்ளது. அரவக்குறிச்சி தாலுகாவில், அலங்கியம் முதல் கரூர் வரை, வலது கரையிலுள்ள 10 பழைய வாய்க்கால் பாசனத்துக்கு உட்பட்ட 21 ஆயிரத்து 867 ஏக்கர் நிலங்களுக்கு கடந்த செப்டம்பர் மாதத்தில் நீர் திறக்கப்பட்ட நிலையில், வரும் 28ம் தேதிவரை நீர் வழங்கும் வகையில் பாசன காலம் நீடிக்கப்பட்டுள்ளது.



அதேபோல், புதிய ஆயக்கட்டு பாசனத்தில், உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் தாலுகாவில் 25 ஆயிரத்து, 250 ஏக்கர் நிலங்களுக்கும், வரும் 28 வரை பாசன காலம் நீடிக்கப்பட்டது. அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்து, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும், வெயில் காரணமாக, வறட்சி ஏற்பட்டுள்ளது.

கோடையின் தாக்கம் அதிகரித்து, அணைக்கான நீர்வரத்தும் குறைந்துள்ளது. இந்நிலையில், அணையிலிருந்து பாசன நீர் வழங்கப்பட்டிருந்தது. அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாயில் நீர் திறக்கப்படுவதால், அணை நீர்மட்டம் தொடர்ந்து வேகமாக சரிந்து வருகிறது.

அமராவதி அணையில் மொத்தமுள்ள 90 அடியில், காலை நிலவரப்படி 63.78 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 43 கனஅடி நீர் வந்துகொண்டுள்ளது. அணையிலிருந்து, 300 அடி நீர் வெளியேற்றபட்டுவருகிறது.

Newsletter

ஆவாரம்பாளையம் காய்கறி சந்தையில் தேங்காய் விற்று வாக்கு சேகரித்த K.R. Jayaram

கோவை சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K.R. Jayaram ஆவாரம்பாளையம் காய்கறி சந்தையில் தேங்காய் விற்பனையில் ஈடுபட்டு வா...

துடியலூரில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

தொகுதி மறுவரையறை மசோதாவை கண்டித்து துடியலூர் கிழக்கு பகுதி சார்பாக கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து, தொகுதி மறுவரையறை மசோ...

தாராபுரத்தில் திமுக இளைஞரணி கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

தொகுதி மறு வரையறை சட்ட மசோதாவை கண்டித்து, மத்திய அரசு மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தாராபுரம் கிழக்கு மாவட்ட தி...

கோவை வடக்கு: அடுக்குமாடி குடியிருப்புகளில் வாக்கு சேகரித்த வானதி சீனிவாசனின் குடும்பத்தார்..!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசனுக்காக, அவரது கணவர் சீனிவாசன் மற்றும் மகன்கள். அடுக்குமாடி குடியிருப...

பொள்ளாச்சி திமுக வேட்பாளருக்கு தேவாங்க செட்டியார் சமூகத்தினர் ஆதரவு..!

வரும் சட்டமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதச்சர்பற்ற முற்போக்கு கூட்டணியின்  வேட்பாளர் நித்தியானந்த...

கோவை குமரகுரு நிறுவனத்தில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி

கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி வாகனம் வருகை தந்தது. 100-க்கும் மேற்பட்ட...