உடுமலையில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சாலைமறியல் - 62 பேர் கைது

உடுமலை மின்வாரிய மேற்பார்வைப்பொறியாளர் அலுவலகம் முன்பு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். ஒப்பந்தப்படி தினக்கூலியாக ரூ.380 வழங்க வேண்டும், ஒப்பந்தப் பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


திருப்பூர்: உடுமலையில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மாவட்டம் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு உடுமலை மின் வட்டக்கிளை சார்பில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் உடுமலை-திருப்பூர் சாலையில் உள்ள மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் முன்பு அமர்ந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு துணைத்தலைவர் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். கோபாலகிருஷ்ணன், ஜெகதீசன் ஆகியோர் மறியல் போராட்டத்தின் அவசியம் குறித்துப் பேசினர்.

இதில், மின் வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஒப்பந்தப்படி தினக்கூலியாக ரூ.380 வழங்க வேண்டும், காலியாக உள்ள களப்பணியிடங்களில் ஒப்பந்தப் பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும், சம வேலைக்குச் சம ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.

இந்த மறியல் போராட்டத்தால் உடுமலை-திருப்பூர் சாலையில் போக்குவரத்து பாதித்தது. இதைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட 62 பேரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Newsletter

கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவை

தென் ரயில்வே கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவையை அறிவித்துள்ளது. திருந...

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...

கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி, சனிக்கிழமை கோட்டாட்சியர் வ...