உடுமலையில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சாலைமறியல் - 62 பேர் கைது

உடுமலை மின்வாரிய மேற்பார்வைப்பொறியாளர் அலுவலகம் முன்பு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். ஒப்பந்தப்படி தினக்கூலியாக ரூ.380 வழங்க வேண்டும், ஒப்பந்தப் பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


திருப்பூர்: உடுமலையில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மாவட்டம் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு உடுமலை மின் வட்டக்கிளை சார்பில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் உடுமலை-திருப்பூர் சாலையில் உள்ள மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் முன்பு அமர்ந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு துணைத்தலைவர் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். கோபாலகிருஷ்ணன், ஜெகதீசன் ஆகியோர் மறியல் போராட்டத்தின் அவசியம் குறித்துப் பேசினர்.

இதில், மின் வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஒப்பந்தப்படி தினக்கூலியாக ரூ.380 வழங்க வேண்டும், காலியாக உள்ள களப்பணியிடங்களில் ஒப்பந்தப் பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும், சம வேலைக்குச் சம ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.

இந்த மறியல் போராட்டத்தால் உடுமலை-திருப்பூர் சாலையில் போக்குவரத்து பாதித்தது. இதைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட 62 பேரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...