கோவை ஈஷா மையத்திற்கு நாளை ஜனாதிபதி வருகை - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

ஈஷா மையத்தில் நாளை நடக்கும் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கோவை வருவதை முன்னிட்டு, அவர் செல்லும் பாதையில் கோவை மாநகர போலீசார் சார்பில் பாதுகாப்பு ஒத்திகை நடந்தது.



கோவை: ஈஷா மையத்திற்கு ஜனாதிபதி வருகையையொட்டி கோவையில் 5000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கோவையை அடுத்த ஈஷா யோகா மையத்தில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான மகா சிவராத்திரி விழா நாளை நடைபெற உள்ளது.

இதையொட்டி நாளை (18-ந் தேதி) மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை அங்கு உள்ள ஆதியோகி சிலை முன்பு மஹாசிவராத்திரி விழா உற்சாகமாக நடைபெற உள்ளது. இந்த விழாவில் தியான லிங்கத்தில் பஞ்சபூத ஆராதனை, லிங்க பைரவி தேவியின் மகா யாத்திரை, தியானங்கள், ஆதியோகி திவ்ய தரிசன காட்சி, பாரம்பரிய கலைஞர்களின் இசை, நடன நிகழ்ச்சி என விடிய விடிய பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.

இந்த நிலையில், கோவை ஈஷா யோகா மையத்தில் நாளை நடக்கும் மகா சிவராத்திரி விழாவில் தலைமை அழைப்பாளராக ஜனாதிபதி திரௌபதி முர்மு பங்கேற்கிறார். இதற்காக டெல்லியிலிருந்து தனி விமானத்தில் நாளை காலை 8.45 மணி அளவில் ஜனாதிபதி திரௌபதி முர்மு புறப்படுகிறார். மதுரை விமான நிலையத்துக்குப் பகல் 11.45 மணி அளவில் வந்து சேருகிறார். அவருக்கு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

அங்கிருந்து காரில் புறப்பட்டு 12.15 மணிக்கு மீனாட்சி அம்மன் கோவிலைச் சென்றடைகிறார். பூரண கும்ப மரியாதையுடன் கோவில் சார்பில் ஜனாதிபதிக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் சன்னதிகள் உள்பட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று தரிசனம் செய்கிறார். சுமார் 1 மணி நேரம் கோவிலில் இருக்கிறார்.

பின்னர் கோவிலிலிருந்து பிற்பகலில் மீண்டும் விமான நிலையம் புறப்படுகிறார். மதுரையிலிருந்து நாளை தனி விமானத்தில் புறப்பட்டு மாலை 3.10 மணிக்குக் கோவை விமான நிலையம் வந்தடைகிறார். பின்னர் கார் மூலம் ரேஸ்கோர்ஸ் அரசு விருந்தினர் மாளிகைக்கு மாலை 3.30 மணிக்கு வருகிறார்.

அங்கிருந்து அவர், கார் மூலம் தொண்டாமுத்தூர் சாலை வழியாக ஈஷா யோகா மையத்துக்கு மாலை 6 மணிக்கு செல்கிறார். அன்று இரவு, மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்ட பின்னர் இரவு 9.15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு கோவை ரேஸ்கோர்சில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்து அங்கு தங்குகிறார்.



நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை கோவை விமான நிலையத்துக்கு காரில் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்துக்குப் புறப்பட்டுச் செல்கிறார்.

ஜனாதிபதி வருகையை முன்னிட்டு, கோவை மாநகர மற்றும் மாவட்ட போலீசார் தீவிர பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு உள்ளனர். குடியரசு தலைவர் செல்லும் பாதைகள் குறித்துத் திட்டமிடப்பட்டு பாதுகாப்பு ஒத்திகை நடந்தது.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...