கூடலூர் அருகே வனப்பகுதியில் திடீர் தீ - 10 ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம்!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள நாடு காணி வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் ஏற்பட்ட திடீர் காட்டுத்தீ காரணமாக 10 ஏக்கர் பரப்பிலான செடி, கொடிகள் எரிந்து நாசம்.



நீலகிரி: கூடலூர் அருகே நாடு காணி வனப்பகுதியில் ஏற்பட்ட தீயால் சுமார் 10 ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமானது.



நீலகிரி மாவட்டத்தில் கடும் உறைபனி காரணமாக வனப்பகுதிகளில் உள்ள மரம், செடி, கொடிகள் வறண்டு வருகின்றன. இதனால் கடும் வறட்சி நிலவ தொடங்கி உள்ள நிலையில் கூடலூர் அருகே உள்ள நாடு காணி வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் திடீர் காட்டுத்தீ ஏற்பட்டது.



தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வனச்சரகர் சஞ்சீவ் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட வேட்டை தடுப்பு காவலர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும் சுமார் 10 ஏக்கர் பரப்பிலான வனப்பகுதி எரிந்து நாசமானது.



இதேபோல் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட சிங்கார வனப்பகுதியிலும் காட்டுத் தீ ஏற்பட்டது. இதனையும் கட்டுப்படுத்தும் பணியில் வன ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.



காட்டு தீ ஏற்பட்ட இடத்தில் டெட்டனேட்டர் குச்சிகள் கண்டு பிடிக்கப்பட்டன. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கூடலூர் கோட்ட உதவி வன அலுவலர் கருப்பையா மற்றும் தேவாலா போலிசார் டெட்டனேட்டர் குச்சிகளை கைபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த டெட்டனேட்டர் குச்சிகள் வெப்பத்தினால் தீ பற்றிய போது காட்டு தீ ஏற்பட்டதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...