பவாணியின் குறுக்கே கேரளா அணை கட்டும் பணியை நிறுத்த தமிழக அரசு நீதிமன்றத்தில் தடையாணை வாங்க வேண்டும் - தபெதிக கு.ராமகிருட்டிணன்

பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதை தடுத்து நிறுத்த தமிழக அரசு விரைவாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தடையாணை பெற வேண்டும் என கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் தெரிவித்துள்ளார்.

தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் இன்று கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் தமிழகத்தில் நடந்த அரசியல் குழப்பங்களை பயன்படுத்தி கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே தேக்கு வட்டை என்னும் பகுதியில் தடுப்பணையை கட்டி முடித்துள்ளது எனவும், மேலும் 6 இடங்களில் தடுப்பணை கட்ட திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்களும் விவசாயிகளும் தொடர்ந்து கோரிக்கைகள் வைத்தும் தமிழக அரசு விரைந்து வழக்கு தொடுத்து முறையாக வழக்காடாத காரணத்தால் தடையாணை பெற முடியவில்லை என கூறிய அவர், மேற்கு மண்டலத்தை சார்ந்த ஒருவர் முதல்வராக பொறுப்பேற்றுள்ள நிலையில் இந்த பிரச்சனைக்கு முழு கவனம் செலுத்தி மீண்டும் புதிய வழக்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும், வரும் 19 ஆம் தேதி கோவை மாவட்ட திமுக தலைமை அலுவலகத்தில் அனைத்து கட்சி மற்றும் பல்வேறு அமைப்பினர் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாகவும் இதில் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை ஒன்றுதிரட்டி கோவையிலிருந்து கேரளா செல்லும் வழித்தடங்களை அடைக்கும் வகையிலான போராட்டம் குறித்து முடிவெடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...