கோவையில் மக்கள் நல்வாழ்வு துறையில் சார்பில் கலந்தாய்வு கூட்டம் - அமைச்சர் சுப்பிரமணியன் பங்கேற்பு

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் 2023-24ஆம் ஆண்டுக்கான மானிய கோரிக்கையின் போது அறிவிக்கப்பட வேண்டிய புதிய திட்டங்கள் குறித்து மருத்துவ வல்லுநர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உடனான கலந்தாலோசனைக் கூட்டம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.



கோவை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் 2023-24ஆம் ஆண்டுக்கான மானிய கோரிக்கையின் போது அறிவிக்கப்பட வேண்டிய புதிய திட்டங்கள் குறித்து கலந்தாலோசனை கூட்டம் அமைச்சர் மா.சுப்ரமணியன் தலைமையில் நடைபெற்றது.



கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் 2023-24ஆம் ஆண்டுக்கான மானிய கோரிக்கையின் போது அறிவிக்கப்பட வேண்டிய புதிய திட்டங்கள் குறித்து மருத்துவ வல்லுநர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உடனான கலந்தாலோசனைக் கூட்டம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.



இதில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், தனியார் மருத்துவமனை நிறுவனர்கள், அரசு மருத்துவ பணியாளர்கள், அரசு மருத்துவத்துறை ஊழியர் சங்க நிர்வாகிகள் எனப் பலர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை முன்வைத்தனர்.



முன்னதாக இத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும், இதற்கு முன்பு மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் குறித்தும் அமைச்சர் எடுத்துரைத்தார்.



இந்நிகழ்வில் மருத்துவ வல்லுநர்கள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனத்தார்களின் கருத்துக்கள் அனைத்தும் கலந்தாலோசிக்கப்பட்டு இத்துறை அலுவலர்களால் பதிவு செய்யப்பட்டன.



கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:



மாநில திட்டக்குழு உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் இந்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் பதிவு செய்தார்கள் எனத் தெரிவித்த அமைச்சர் இது ஒரு முன் மாதிரி முயற்சி.

மக்கள் நல்வாழ்வுத் துறையை சிறப்பாக வளர்க்க முன்னெடுக்க நல்ல முயற்சி. புற்றுநோய், காசநோய் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டன. 500-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் விரைவில் திறக்கப்படும் நிலையில் உள்ளன.

750 புதிய 108 வாகனங்கள், காசநோய் கண்டறிய டிஜிட்டல் எக்ஸ்-ரே வசதி உடன் 23 வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகளில் லஞ்ச புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கோழிக்கழிவுகள், மருத்துவக் கழிவுகளை நீர்நிலைகளில் கொட்டினால் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க பரிசீலிக்கப்படுகிறது. கொரோனா கட்டுப்பாடாக, வெளிநாடுகளிலிருந்து வருபவர்களுக்கு ரேண்டம் சோதனை நடக்கிறது.

இவ்வாறு அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...