மின்வேலியில் சிக்கிய காட்டுயானை - நீலகிரி வனத்துறை அதிகாரிகள் பத்திரமாக மீட்பு!

கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் மின்வேலியில் சிக்கி உயிருக்கு போரடிய காட்டு யானையை வனத்துறையினர் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றி வனப்பகுதிக்குள் விட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


நீலகிரி: கேரளா, கர்நாடக மாநில எல்லையில் முதுமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இந்த காப்பகத்தை ஒட்டி அமைந்துள்ள கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் ஆயிரக்கணக்கான காட்டு யானைகள் சுற்றி திரிந்து வருகின்றன.

இந்த நிலையில் ஓம்கர் வன சரகத்திற்கு உட்பட்ட பார்கி வன பகுதியில் இருந்து வெளியே வந்த காட்டு யானை ஒன்று, அருகில் உள்ள தனியார் தோட்டத்திற்குள் புகுந்தபோது மின்வேலியில் சிக்கியது. அப்போது மின்சாரம் தாக்கியதில் மயங்கி அந்த யானை கீழே விழுந்தது.

அதனை கண்ட நிலத்தின் உரிமையாளர் உடனடியாக மின்வேலிக்கான மின் இணைப்பை துண்டித்துவிட்டு, சம்பவம் குறித்துவனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.



விரைந்து வந்த வனத்துறையினர், மயங்கி விழுந்த யானையின் காலில் சுற்றி இருந்த மின் கம்பிகளை வெட்டி அகற்றினர்.



ஆனால், யானையால் எழுந்து நிற்க முடியவில்லை.



பின்னர் ஜெசிபி எந்திரத்தின் உதவியுடன் சுமார் 10 மணி நேரத்திற்கு மேலாக போராடி அந்த யானைக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளித்து வனத்துறையினர் காப்பாற்றினர்.



இதனைத் தொடர்ந்து, அந்த யானை வெற்றிகரமாக வனப்பகுதிக்குள் நடந்து சென்றது.

Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...