கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் மின்வேலியில் சிக்கி உயிருக்கு போரடிய காட்டு யானையை வனத்துறையினர் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றி வனப்பகுதிக்குள் விட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி: கேரளா, கர்நாடக மாநில எல்லையில் முதுமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இந்த காப்பகத்தை ஒட்டி அமைந்துள்ள கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் ஆயிரக்கணக்கான காட்டு யானைகள் சுற்றி திரிந்து வருகின்றன.
இந்த நிலையில் ஓம்கர் வன சரகத்திற்கு உட்பட்ட பார்கி வன பகுதியில் இருந்து வெளியே வந்த காட்டு யானை ஒன்று, அருகில் உள்ள தனியார் தோட்டத்திற்குள் புகுந்தபோது மின்வேலியில் சிக்கியது. அப்போது மின்சாரம் தாக்கியதில் மயங்கி அந்த யானை கீழே விழுந்தது.
அதனை கண்ட நிலத்தின் உரிமையாளர் உடனடியாக மின்வேலிக்கான மின் இணைப்பை துண்டித்துவிட்டு, சம்பவம் குறித்துவனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

விரைந்து வந்த வனத்துறையினர், மயங்கி விழுந்த யானையின் காலில் சுற்றி இருந்த மின் கம்பிகளை வெட்டி அகற்றினர்.

ஆனால், யானையால் எழுந்து நிற்க முடியவில்லை.

பின்னர் ஜெசிபி எந்திரத்தின் உதவியுடன் சுமார் 10 மணி நேரத்திற்கு மேலாக போராடி அந்த யானைக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளித்து வனத்துறையினர் காப்பாற்றினர்.

இதனைத் தொடர்ந்து, அந்த யானை வெற்றிகரமாக வனப்பகுதிக்குள் நடந்து சென்றது.
இந்த நிலையில் ஓம்கர் வன சரகத்திற்கு உட்பட்ட பார்கி வன பகுதியில் இருந்து வெளியே வந்த காட்டு யானை ஒன்று, அருகில் உள்ள தனியார் தோட்டத்திற்குள் புகுந்தபோது மின்வேலியில் சிக்கியது. அப்போது மின்சாரம் தாக்கியதில் மயங்கி அந்த யானை கீழே விழுந்தது.
அதனை கண்ட நிலத்தின் உரிமையாளர் உடனடியாக மின்வேலிக்கான மின் இணைப்பை துண்டித்துவிட்டு, சம்பவம் குறித்துவனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
விரைந்து வந்த வனத்துறையினர், மயங்கி விழுந்த யானையின் காலில் சுற்றி இருந்த மின் கம்பிகளை வெட்டி அகற்றினர்.
ஆனால், யானையால் எழுந்து நிற்க முடியவில்லை.
பின்னர் ஜெசிபி எந்திரத்தின் உதவியுடன் சுமார் 10 மணி நேரத்திற்கு மேலாக போராடி அந்த யானைக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளித்து வனத்துறையினர் காப்பாற்றினர்.
இதனைத் தொடர்ந்து, அந்த யானை வெற்றிகரமாக வனப்பகுதிக்குள் நடந்து சென்றது.