'ரவுடித்தனம் செய்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்..!' - ஆணையர் பாலகிருஷ்ணன் எச்சரிக்கை

கோவையில் அடுத்தடுத்து அரங்கேறிய கொடூர கொலை சம்பவங்கள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தனிப்படை போலீசார் மேற்கொண்ட அதிரடி வேட்டையில் 2 நாட்களில் 33 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கோவை: கோவையில் கடந்த 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் அடுத்தடுத்த இரண்டு கொலைகள் கொடூரமான முறையில் நடைபெற்றது. பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் சத்திய பாண்டியன் என்ற ரவுடி கட்டப்பஞ்சாயத்து காரணமாக சஞ்சய் தலைமையிலான ரவுடி கும்பலால் நடுத்தெருவில் விரட்டி விரட்டி சரமாரியாக அரிவாளால் வெட்டி கொல்லப்பட்டார்.



அதற்கு அடுத்த நாள் காலை, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் பின்புறம், குற்ற வழக்கு ஒன்றில் ஆஜராக வந்த கோகுல் என்ற ரவுடியை ஜோஸ்வா, கெளதம் உள்ளடக்கிய ரவுடி கும்பல், பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் அரிவாளால் ஓட ஓட வெட்டி கொன்றது.



இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறை, தனிப்படை அமைத்து நடத்திய விசாரணையில் இரு கொலைகளும் பழிக்குப்பழி வாங்கும் நோக்கத்தில் அரங்கேறியிருப்பது தெரியவந்தது.

இந்த நிலையிலே ரவுடிகளின் அட்டூழியத்தை அடக்க கோவை மாநகர காவல் ஆனையாளர் பாலகிருஷ்ணன், ரவுடி கும்பல்களை கைது செய்ய உத்தரவிட்டார். அதனடிப்படையில், கோவை மாநகர் முழுவதும் வாகன தணிக்கை செய்து சந்தேகத்திற்கிடமானோர் வீடுகளில் தணிக்கையில் தனிப்படை போலீசார் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து, கோவையின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் உள்ள ரவுடிகளின் பட்டியலையும் தயார் செய்த காவல்துறை, மொத்தமாக 64 வீடுகளில் சோதனை செய்து 11 வழக்குகளை பதிவு செய்து 33 ரவுடி கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இதில் 3 ரவுடிகளிடம் நன்னடத்தை பத்திரமெழுதி கையெழுத்து பெறப்பட்டுள்ளது.

தனிப்படையின் இந்த அதிரடி சோதனையில், கத்தி அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள், கஞ்சா பொட்டலங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படும் வகையில் ரவுடித்தனம் செய்யும் ரவுடிகள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கபடும் என கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...