‘யக்‌ஷா’ 2ஆம்‌ நாள்‌ விழா - மக்களை பரவசத்தில் ஆழ்த்திய சஷாங்கின் புல்லாங்குழல்‌ இசை!

மஹா சிவராத்திரியை முன்னிட்டு கோவை ஈஷா மையத்தில் ‘யக்‌ஷா’ கலை திருவிழா தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் 2ஆம் நாளான இன்று, 'செவாலியே' விருது வென்ற சஷாங்க்‌ தனது புல்லாங்குழல்‌ இசையால்‌ மக்களை பரவசத்தில்‌ ஆழ்த்தினார்‌.


கோவை: ஈஷாவின்‌ 'யக்‌ஷா' கலைத்‌ திருவிழாவில்‌ 'செவாலியே' விருது வென்ற சஷாங்க்‌ தனது புல்லாங்குழல்‌ இசையால்‌ மக்களை பரவசத்தில்‌ ஆழ்த்தினார்‌.

மஹா சிவராத்திரியை முன்னிட்டு பாரம்பரிய கலைகளை பறைச்சாற்றும்‌ 'யக்‌ஷா' கலை திருவிழா கோவை ஈஷா யோகா மையத்தில்‌ நடைபெற்று வருகிறது. இரண்டாம்‌ நாளான இன்று (பிப்‌.16) பிரபல புல்லாங்குழல்‌ இசை கலைஞர்‌ சஷாங்க்‌ சுப்ரமணியத்தின்‌ இசை நிகழ்ச்சி நடைபெற்றது.



ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த அற்புதமான நிகழ்ச்சியில்‌ அவர்‌ தனது இனிய குழல்‌ இசையால்‌ மக்களை மகிழ்வித்தார்‌. அவருடன்‌ பத்ரி சதீஷ்‌ குமார்‌ மிருதங்கமும்‌, கிரீதர்‌ உடுப்பா கடமும்‌ இசைத்தனர்‌.



இந்நிகழ்ச்சியை தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள்‌ மற்றும்‌ நாடுகளைச்‌ சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள்‌ கண்டு ரசித்தனர்‌.

சஷாங்க்‌‌ குடியரசு தலைவரிடம்‌ இருந்து சங்கீத்‌ நாடக அகாடமி விருது, பிரான்ஸ்‌ நாட்டின்‌ செவாலியே விருது, தமிழக அரசின்‌ கலைமாமணி விருது உள்ளிட்ட ஏராளமான பட்டங்கள்‌ மற்றும்‌ பாராட்டுக்களை பெற்றவர்.

'யக்‌ஷா' திருவிழாவின்‌ நிறைவு நாளான நாளை (பிப்.17) மாதவி முத்கல்‌ குழுவினரின்‌ ஒடிசி நடன நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த கலை நிகழ்ச்சிகள்‌ கூர்யகுண்டம்‌ மண்டபம்‌ முன்பாக தினமும்‌ மாலை 6.50 மணி முதல்‌ 8.30 மணி வரை நடைபெற உள்ளது.‌ இந்நிகழ்ச்சியை பொதுமக்கள் பார்ப்பதற்கு அனுமதி இலவசம்‌ என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...