கோவை கோபாலபுரத்தில் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கு - கைதானவர்களுக்கு மார்ச் 1 வரை நீதிமன்ற காவல்

கோவை கோபாலபுரம் அருகே பட்டப்பகலில் ஒருவரை கொலை செய்த வழக்கில், கைது செய்யப்பட்டவர்களை வரும் மார்ச் 1ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கோவை மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்ற உத்தரவு.



கோவை: கோவை மாவட்டம் கோபாலபுரத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான நபர்களை வரும் மார்ச் 1ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கோபாலபுரத்தில் நேற்று முன்தினம் பட்டப்பகலில் கோவையை சேர்ந்த ரவுடி கோகுல் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். மேலும் இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த மனோஜ் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த வழக்கு தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து நேற்று கோத்தகிரியில் 7 பேரை கைது செய்தனர். கைது செய்யபட்டவர்களை கோவை அழைத்து வரும்போது கௌதம், ஜோஸ்வா ஆகிய இருவரும் மேட்டுபாளையம் அருகே தப்பிச்செல்ல முயன்றபோது இருவரையும் துப்பாக்கியில் சுட்டு கைது செய்தனர்.

இதனையடுத்து இருவரும் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



இதனிடையே இந்த வழக்கில் கைது செய்யபட்ட டேனியல், ஹரி என்ற கௌதம், பரணி சௌந்தர், அருண்குமார், சூர்யா ஆகிய ஐந்து பேரையும் கோவை மாநகர போலீசார், பாதுகாப்புடன் அழைத்து வந்து கோவை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருத்திகா 5 பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து ஐவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Links:




கோவை நீதிமன்றம் அருகே பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக் கொலை - மர்மநபர்கள் தப்பியோட்டம்

கோவை நீதிமன்றம் அருகே பட்டப்பகலில் இளைஞர் படுகொலை - செல்போன் வீடியோ வெளியீடு

கோவை கோபாலபுரம் இளைஞர் கொலை - தப்பியோடிய இளைஞர்களை சுட்டுப்பிடித்த போலீசார்!

கோவை நீதிமன்றம் அருகே பட்டபகலில் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கு - கோத்தகிரியில் 7 பேரை கைது செய்த போலீசார்!


Newsletter

கோவை: திமுக கவுன்சிலர்கள் இருவர் அதிமுகவில் இணைந்தனர்; CPI கவுன்சிலர் ராஜினாமா

கோயம்புத்தூரில் திமுகவைச் சேர்ந்த இரு மாநகராட்சி உறுப்பினர்கள் அதிமுகவில் இணைந்த நிலையில், சிபிஐ கவுன்சிலர் ஒருவர் கட்சி...

கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் கதவு உடைத்து திருட முயன்ற முகமூடி திருடர்கள் தப்பியோட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் நேற்று மாலை 7 மணியளவில் நாச்சிமுத்து வீட்டின் முன்பக...

காங்கேயம் பாப்பினியில் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான 19 ஆடுகள் திருட்டு; விவசாயிகள் மத்தியில் அச்சம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பாப்பினியில் விவசாயி பொன்னுசாமியின் தோட்டத்தில் இருந்து நள்ளிரவில் மர்ம நபர்கள் 19 ஆடுகளை...

தாராபுரம் அருகே குடிபோதையில் அண்ணன்-தம்பி மோதல்: அருவாள் தாக்குதலில் அண்ணன் படுகாயம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தம்பி சேனாதிபதி அண்ணன் சந்திரசேகரை அருவாளால் வெட்டிய ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...