கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் எலி பேஸ்ட் சாப்பிட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் மனைவி உடன் ஏற்பட்ட தகராறால் மனமுடைந்த கண்ணன் என்பவர் கடந்த 12ஆம் தேதி எலி பேஸ்ட் சாப்பிட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


கோவை: கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் எலி பேஸ்ட்டை சாப்பிட்ட நபர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கோவை ரத்தினபுரியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கண்ணன் சொந்தமாக கால்டாக்சி வைத்து ஓட்டி வந்துள்ளார். கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் மனமுடைந்த கண்ணன் எலி பேஸ்ட் உண்ட நிலையில் கவுண்டம்பாளையம் பகுதியில் கால் டாக்சியில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி கண்ணன் உயிரிழந்தார். இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...