கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் எலி பேஸ்ட் சாப்பிட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் மனைவி உடன் ஏற்பட்ட தகராறால் மனமுடைந்த கண்ணன் என்பவர் கடந்த 12ஆம் தேதி எலி பேஸ்ட் சாப்பிட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


கோவை: கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் எலி பேஸ்ட்டை சாப்பிட்ட நபர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கோவை ரத்தினபுரியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கண்ணன் சொந்தமாக கால்டாக்சி வைத்து ஓட்டி வந்துள்ளார். கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் மனமுடைந்த கண்ணன் எலி பேஸ்ட் உண்ட நிலையில் கவுண்டம்பாளையம் பகுதியில் கால் டாக்சியில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி கண்ணன் உயிரிழந்தார். இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...