கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் எலி பேஸ்ட் சாப்பிட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் மனைவி உடன் ஏற்பட்ட தகராறால் மனமுடைந்த கண்ணன் என்பவர் கடந்த 12ஆம் தேதி எலி பேஸ்ட் சாப்பிட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


கோவை: கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் எலி பேஸ்ட்டை சாப்பிட்ட நபர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கோவை ரத்தினபுரியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கண்ணன் சொந்தமாக கால்டாக்சி வைத்து ஓட்டி வந்துள்ளார். கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் மனமுடைந்த கண்ணன் எலி பேஸ்ட் உண்ட நிலையில் கவுண்டம்பாளையம் பகுதியில் கால் டாக்சியில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி கண்ணன் உயிரிழந்தார். இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...