கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் எலி பேஸ்ட் சாப்பிட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் மனைவி உடன் ஏற்பட்ட தகராறால் மனமுடைந்த கண்ணன் என்பவர் கடந்த 12ஆம் தேதி எலி பேஸ்ட் சாப்பிட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


கோவை: கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் எலி பேஸ்ட்டை சாப்பிட்ட நபர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கோவை ரத்தினபுரியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கண்ணன் சொந்தமாக கால்டாக்சி வைத்து ஓட்டி வந்துள்ளார். கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் மனமுடைந்த கண்ணன் எலி பேஸ்ட் உண்ட நிலையில் கவுண்டம்பாளையம் பகுதியில் கால் டாக்சியில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி கண்ணன் உயிரிழந்தார். இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...