கோவை டி.கே மார்க்கெட்டில் முருங்கைக்காய் விலை உயர்வு

கோவை டி.கே மார்க்கெட்டில் ஒரு கிலோ ஒன்றுக்கு 80 ரூபாய் வரை விலை உயர்ந்து காணப்பட்டதால், பொதுமக்கள் அதிர்ச்சி. விலை அதிகரித்து காணப்பட்டதால் முருங்கைக்காய் விற்பனை குறைந்து காணப்பட்டதாக வியாபாரிகள் கவலை.


கோவை: கோவை டி.கே மார்க்கெட்டில் முருங்கைக்காய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் வாங்குவதற்குத் தயக்கம் காட்டினர்.

கோவை உக்கடம் பகுதியில் டி.கே.மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டிற்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் காய்கறிகள், வெங்காயம், உருளை கிழக்கு போன்றவை வருகின்றன. இங்கு வரும் காய்கறிகளைக் கோவை மாவட்டம் முழுவதும் இருந்து வியாபாரிகள் வந்து மொத்தமாகவும், சில்லறையாகவும் வாங்கி செல்வார்கள்.

அதே போல் கோவை மாநகர சுற்றுவட்டார மக்களும், காய்கறிகள் விலை கடைகளைக் காட்டிலும் குறைவாக உள்ளதால் இந்த மார்க்கெட்டிற்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்வது வழக்கம். இதனிடையே இங்கு விற்பனைக்கு வந்த காய்கறிகளில் முருங்கைக்காய் விலை உயர்ந்து காணப்பட்டது.

இதனால் வியாபாரிகள் அதிகமாக முருங்கைக்காய்களை வாங்கவில்லை. மக்களும் குறைந்த அளவிலேயே வாங்கி சென்றனர்.

இதுகுறித்து கோவை மாவட்ட அனைத்து மொத்த காய்கனி வியாபாரிகள் கூறுகையில், டி.கே. மார்க்கெட் மற்றும் கோவையின் இதர மார்க்கெட்டுகளிலும் முருங்கைக்காய் விலை அதிகரித்துக் காணப்பட்டது.

மொத்த விற்பனை விலையில், கிலோ ஒன்றுக்கு முருங்கை ரூ.80 வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் முருங்கைக்காயை வாங்க வந்த முருங்கை பிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். முருங்கைக்கு அடுத்து வெண்டைக்காய் ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டது, என்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...