கோவை டி.கே மார்க்கெட்டில் முருங்கைக்காய் விலை உயர்வு

கோவை டி.கே மார்க்கெட்டில் ஒரு கிலோ ஒன்றுக்கு 80 ரூபாய் வரை விலை உயர்ந்து காணப்பட்டதால், பொதுமக்கள் அதிர்ச்சி. விலை அதிகரித்து காணப்பட்டதால் முருங்கைக்காய் விற்பனை குறைந்து காணப்பட்டதாக வியாபாரிகள் கவலை.


கோவை: கோவை டி.கே மார்க்கெட்டில் முருங்கைக்காய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் வாங்குவதற்குத் தயக்கம் காட்டினர்.

கோவை உக்கடம் பகுதியில் டி.கே.மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டிற்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் காய்கறிகள், வெங்காயம், உருளை கிழக்கு போன்றவை வருகின்றன. இங்கு வரும் காய்கறிகளைக் கோவை மாவட்டம் முழுவதும் இருந்து வியாபாரிகள் வந்து மொத்தமாகவும், சில்லறையாகவும் வாங்கி செல்வார்கள்.

அதே போல் கோவை மாநகர சுற்றுவட்டார மக்களும், காய்கறிகள் விலை கடைகளைக் காட்டிலும் குறைவாக உள்ளதால் இந்த மார்க்கெட்டிற்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்வது வழக்கம். இதனிடையே இங்கு விற்பனைக்கு வந்த காய்கறிகளில் முருங்கைக்காய் விலை உயர்ந்து காணப்பட்டது.

இதனால் வியாபாரிகள் அதிகமாக முருங்கைக்காய்களை வாங்கவில்லை. மக்களும் குறைந்த அளவிலேயே வாங்கி சென்றனர்.

இதுகுறித்து கோவை மாவட்ட அனைத்து மொத்த காய்கனி வியாபாரிகள் கூறுகையில், டி.கே. மார்க்கெட் மற்றும் கோவையின் இதர மார்க்கெட்டுகளிலும் முருங்கைக்காய் விலை அதிகரித்துக் காணப்பட்டது.

மொத்த விற்பனை விலையில், கிலோ ஒன்றுக்கு முருங்கை ரூ.80 வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் முருங்கைக்காயை வாங்க வந்த முருங்கை பிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். முருங்கைக்கு அடுத்து வெண்டைக்காய் ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டது, என்றனர்.

Newsletter

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...