உடுமலை அரசினர் ஆய்வு மாளிகை முன்பு குடிமகன்கள் நடமாட்டம்!

உடுமலை அரசினர் ஆய்வு மாளிகை முன்பு உள்ள திறந்தவெளி சாக்கடையில் மது பிரியர்கள் அடிக்கடி விழுந்து விடுவதால் உடனடியாக அதனை மூட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசினர் ஆய்வு மாளிகைக்கு அருகே உள்ள திறந்தவெளி சாக்கடையை உடனடியாக மூட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

உடுமலை அருகேயுள்ள தளி சாலையில் அரசினர் ஆய்வு மாளிகை அமைந்து உள்ளது. இந்த ஆய்வு மாளிகைக்கு உடுமலை பகுதியில் ஆய்வு செய்வதற்காக வரும் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் தங்குவதற்காக இந்த ஆய்வு மாளிகை அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் ஆய்வு மாளிகை முன்பு திறந்தவெளி சாக்கடை அமைக்கப்பட்டு உள்ளதால் கொசுத் தொல்லை அதிகரித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.



இதனிடையே அந்த பகுதியில் உள்ள அரசு மதுபான கடையில் மது அருந்தும் மது பிரியர்கள் போதையில் தள்ளாடி ஆய்வு மாளிகை முன்பு உள்ள சாக்கடையில் அடிக்கடி விழும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

குறிப்பாக கடந்த இரண்டு நாட்களாக இதுவரை மூன்று பேர் அந்த திறந்தவெளி சாக்கடையில் விழுந்து உள்ளனர். இதனால் ஆய்வு மாளிகைக்கு வரும் அதிகாரிகள் முகம் சுளித்தவாறு சென்று வருகின்றனர்.

இதன் காரணமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு மாளிகை முன்பு உள்ள திறந்தவெளி சாக்கடையை உடனடியாக மூடவேண்டும் என சமூக ஆர்வலர்கள் தரப்பிலும் ஆய்வு மாளிகை தரப்பிலும் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...