உடுமலை அரசு மருத்துவமனையில் இருசக்கர வாகனங்களால் இடையூறு - அவசர ஊர்திகள் செல்வதில் சிக்கல்!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு மருத்துவமனையில் அவசர ஊர்திகள் செல்லும் பாதையின் இருபுறமும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால், நோயாளிகளை சிகிச்சைக்கு அழைத்துச் செல்வதில் சிக்கல் ஏற்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு மருத்துவமனைக்கு உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் 18 மலைவாழ் குடியிருப்புகளைச் சேர்ந்த பொதுமக்கள் உடல் உபாதைகளுக்கு தினமும் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில், அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை செல்லும் பகுதியில் தாறுமாறாக இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் தமிழக அரசின் 108 அவசர ஊர்தி வாகனங்களும், தனியார் அவசர ஊர்திகளும் உள்ளே செல்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுவருகிறது.



இதை முறையாக கண்காணிக்க வேண்டிய அரசு மருத்துவமனை ஊழியர்கள் அவசர ஊர்திகளை நிறுத்தி விட்டு வாருங்கள் என அலட்சியமாக பதில் தெரிவித்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், இன்று காலை உடல்நலம் பாதிக்கப்பட்டவரை தமிழக அரசின் 108 அவசர ஊர்தி கொண்டுவந்தபோது, இருசக்கர வாகனங்கள் இருபுறமும் நிறுத்தப்பட்டிருந்ததால் அவசர சிகிச்சைக்கு செல்லமுடியாத நிலை உருவானது.



அதுமட்டுமின்றி, இருசக்கர வாகனங்களை அப்புறப்படுத்த மருத்துவமனை ஊழியர்கள் நடவடிக்கை எடுக்காததால், பாதிக்கப்பட்ட நோயாளியை வீல் சேரில் வைத்து, அவசர ஊர்தி ஓட்டுநர்களே அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் அங்கு வந்திருந்த பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

அவசர ஊர்தி செல்லும் பாதையில், இரு சக்கர வாகனங்கள் இடைமறித்து நிறுத்தப்படுவதைத் தடுக்க சம்பந்தப்பட்ட அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மற்றும் ஊழியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசின் 108 அவசர ஊர்தி ஓட்டுனர்களும், தனியார் அவசர உறுதி ஓட்டுநர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...