இந்தியாவில் 22 நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி பணிகளை மார்ச் மாதத்திற்குள் முடிக்க திட்டம்

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடங்கப்பட்ட 100 நகரங்களில் 22 நகரங்கள் மார்ச் மாதத்திற்குள் பணிகள் முடிந்து விடும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மத்திய அரசால் கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதியன்று ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் 2016-2018-க்கு இடையில் நடத்தப்பட்ட நான்கு சுற்றாக மேற்கொண்ட ஆய்வு மூலம் 100 நகரங்களை மேம்பாட்டிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டன.

குறிப்பாக நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் முக்கிய நகரங்களை மேம்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். மேலும் இந்த நகரத்தில் வாழும் குடிமக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரம், தூய்மையான சூழலை வழங்குவதோடு, பல்வேறு பிரச்சினைகளுக்கு "ஸ்மார்ட் தீர்வுகளை" கொண்டுவர திட்டமிடப்பட்டது.

இந்த திட்டத்தில் போபால், இந்தூர், ஆக்ரா, வாரணாசி, புவனேஸ்வர், சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, ராஞ்சி, சேலம், சூரத், உதய்பூர், விசாகப்பட்டினம், அகமதாபாத், காக்கிநாடா, புனே, வேலூர், பிம்ப்ரி-சின்ச்வாட், மதுரை, அமராவதி, திருச்சிராப்பள்ளி மற்றும் தஞ்சாவூர் ஆகிய நகரங்கள் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது.

இந்த 22 நகரங்களில் நடைபெற்று வரும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டி வரும் நிலையில் முழு பணிகளும் அடுத்த மாதத்திற்குள் நிறைவடைந்து ஸ்மார்ட் சிட்டிகளாக மாறிவிடும். இது மக்களின் வாழ்க்கை தரத்தை பெரிதளவில் உயர்த்தும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் கவுஷல் கிஷோர் ராஜ்யசபாவில் 100 ஸ்மார்ட் சிட்டிகளில் பணி ஆணைகள் வழங்கப்பட்ட ரூ.1,81,322 கோடி மதிப்பிலான 7,804 திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. சுமார் 5,246 திட்டங்கள் ரூ.98,796 கோடி மதிப்பில் இதுவரை நிறைவேற்றப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார், மிஷன் வழிகாட்டுதல்களின்படி, மத்திய அரசு ஐந்து ஆண்டுகளில் ரூ.48,000 கோடி நிதியுதவி அளிக்கும், சராசரியாக ஒரு நகரத்திற்கு ஆண்டுக்கு ரூ.100 கோடி என்ற அளவில் இருக்கும். அதோடு மாநில அரசு அல்லது நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பால் சமமான தொகை இந்த நகரங்களுக்கு அளிக்கப்படும்.

மீதமுள்ள 78 நகரங்களில் திட்டங்கள் அடுத்த 3-4 மாதங்களில் முடிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கூடுதல் நகரங்களைச் சேர்ப்பதற்கான எந்த திட்டமும் அரசாங்கத்தின் பரிசீலனையில் இல்லை என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது.

Newsletter

22 லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த ஒன்றிய அரசு - நீட் தேர்வு ரத்து கோரி பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

கோயம்புத்தூரில் பல்சமய நல்லுறவு இயக்கம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ம...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்த ஒன்றிய அரசு - முறைகேடுகளுடன் நடக்கும் NEET தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

NEET தேர்வில் தொடர் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றம்சாட்டி, பல்சமய நல்லுறவு இயக்கம் உடனடியாக தேர்வை ரத்து செய்ய வேண்டு...

AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேல் கட்சியிலிருந்து ராஜினாமா

கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தவேல், கட்சியின் தற்போதைய நிகழ்வுகளால் மன...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரின் OSD நியமனம் ரத்து: தமிழக அரசு உத்தரவு

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரான ரிக்கே ராதன் பண்டிட் வெற்றிவேலின் அரசியல் OSD நியமனத்தை, கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்ச...