கோவை கோபாலபுரம் இளைஞர் கொலை - தப்பியோடிய இளைஞர்களை சுட்டுப்பிடித்த போலீசார்!

கோவை கோபாலபுரத்தில் பட்டப்பகலில் இளைஞரை கொலை செய்துவிட்டு தப்பிச்சென்ற கும்பலை கோத்தகிரி அருகே கைது செய்து கோவைக்கு அழைத்து வந்தபோது காவலரை தாக்கிவிட்டு தப்பிச்செல்ல முயன்ற இருவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர்.



கோவை: கோவை நீதிமன்ற வளாகம் அருகே பட்டப்பகலில் ஒருவரை வெட்டிக் கொலை செய்த குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட நிலையில், தப்பிச்செல்ல முயன்ற இருவரை போலீசார் சுட்டுப்பிடித்துள்ளனர்.



கோவை நீதிமன்ற வளாகத்தில் நேற்றைய தினம் கீரணத்தம் பகுதியை சேர்ந்த கோகுல் மற்றும் சிவானந்தபுரம் பகுதியை சேர்ந்த மனோஜ் ஆகியோரை மர்ம கும்பல் ஒன்று வெட்டிவிட்டு தப்பிச்சென்றது.



இதில் கழுத்தில் பலத்த காயமடைந்த கோகுல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் வந்த மனோஜ் கை மற்றும் தலையில் வெட்டுக்காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.



பட்டப்பகலில் அரங்கேறிய இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.



இந்நிலையில், தப்பியோடிய மர்ம கும்பலை சேர்ந்த ஜோஸ்வா தேவபிரியன், கௌதம், அருண்குமார், பரணி, ஹரி உள்பட 7 பேரை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் தலைமையில் போலீசார் கோத்தகிரி அருகே வாகன சோதனையின் போது மடக்கி பிடித்து கைது செய்தனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களை போலீசார் கோவைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதனிடையே மேட்டுப்பாளையம் அருகே வந்த போது, ஜோஸ்வா மற்றும் கௌதம் ஆகியோர் சிறுநீர் கழிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

இதற்காக போலீசார் வாகனத்தை நிறுத்தியுள்ளனர். கீழே இறங்கிய இருவரும், அருகே இருந்த புதர் ஒன்றில் மறைத்து வைத்திருந்த கத்தியால், பாதுகாப்புக்கு சென்ற காவலர் யூசுப்பை வெட்டிவிட்டு தப்பிச்செல்ல முயன்றுள்ளனர். அப்போது, போலீசார் தப்பிச்செல்ல முயன்ற ஜோஸ்வா மற்றும் கௌதம் ஆகிய இருவரையும் காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர்.



காயமடைந்த காவலர் யூசுப், குற்றவாளிகள் ஜோஸ்வா மற்றும் கௌதம் ஆகியோர் மேட்டுப்பாளையம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.



பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

கொலை வழக்கில் கைதானவர்களை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...