கோவை நீதிமன்றம் அருகே பட்டபகலில் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கு - கோத்தகிரியில் 7 பேரை கைது செய்த போலீசார்!

கோவை நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் இருவரை வெட்டிவிட்டு தப்பிச்சென்ற மர்ம கும்பலை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில், கொலை தொடர்பாக 7 பேரை கோத்தகிரி அருகே போலீசார் கைது கோவைக்கு அழைத்துச் சென்றனர்.



கோவை: கோவை நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் ஒருவரை வெட்டிக் கொலை செய்த சம்பவம் தொடர்பாக, 7 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கோவை நீதிமன்றத்திற்கு நேற்றைய தினம் (13.02.2023) பல்வேறு குற்ற வழக்குகள் மற்றும் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய கீரணத்தம் பகுதியை சேர்ந்த கோகுல் மற்றும் சரவணம்பட்டி சிவானந்தபுரம் பகுதியை சேர்ந்த மனோஜ் ஆகியோர் வழக்கு விசாரணைக்காக வந்துள்ளனர்.



நீதிமன்றம் அருகே உள்ள கோபாலபுரம் 2 ஆவது வீதியில் இருவரும் தேனீர் அருந்திய போது, அவர்களை பின் தொடர்ந்து வந்த மர்ம கும்பல், தேனீர் கடை முன்பாக இருவரையும் கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது.



இதில் கழுத்தில் பலத்த காயமடைந்த கோகுல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.



உடன் வந்த மனோஜ் கை மற்றும் தலையில் வெட்டுக்காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

பட்டப்பகலில் அரங்கேறிய இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வந்தது.



இந்நிலையில், தப்பியோடிய மர்ம கும்பலை சேர்ந்த ஒருவரின் செல்போன் சிக்னல் நீலகிரியில் பதிவான நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வந்தனர்.

இதனிடையே கோத்தகிரியில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் 3 இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்களை போலீசார் வழிமறித்த போது நிறுத்தாமல் சென்றுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவர்களை துரத்தி சென்று மடக்கி பிடித்தனர்.

விசாரணையில், பிடிபட்டவர்கள் கோவை நீதிமன்றத்தில் பட்டப்பகலில் ஒருவரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது.



இதனையடுத்து, 3 வாகனத்தில் வந்த ஜோஸ்வா தேவபிரியன், கௌதம், அருண்குமார், பரணி, ஹரி ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.

இதேபோல் இதில் தொடர்புடைய மேலும் இருவரை போலீசார், கட்டபெட்டா பகுதியில் நடத்திய வாகன சோதனையில் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 7 பேரையும் போலீசார், கோவைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

கோவை நீதிமன்றத்தில் நேற்றைய தினம் பட்டப்பகலில் ஒருவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய குற்றவாளிகளை அதிரடியாக போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

22 லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த ஒன்றிய அரசு - நீட் தேர்வு ரத்து கோரி பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

கோயம்புத்தூரில் பல்சமய நல்லுறவு இயக்கம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ம...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்த ஒன்றிய அரசு - முறைகேடுகளுடன் நடக்கும் NEET தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

NEET தேர்வில் தொடர் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றம்சாட்டி, பல்சமய நல்லுறவு இயக்கம் உடனடியாக தேர்வை ரத்து செய்ய வேண்டு...

AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேல் கட்சியிலிருந்து ராஜினாமா

கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தவேல், கட்சியின் தற்போதைய நிகழ்வுகளால் மன...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரின் OSD நியமனம் ரத்து: தமிழக அரசு உத்தரவு

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரான ரிக்கே ராதன் பண்டிட் வெற்றிவேலின் அரசியல் OSD நியமனத்தை, கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்ச...