கோவை ரயில் நிலையத்தில் லேப்டாப் திருடிய வாலிபர் கைது

கோவை ரயில் நிலையத்தில் நின்ற நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் பயணியிடம் லேப்டாப் மற்றும் ரூ.4 ஆயிரம் பணத்தை திருடிய கேரளா இளைஞரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை ரயில் நிலையத்தில் லேப்டாப் திருடிய வாலிபரை போலீசார் விரட்டிச் சென்று பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பலசுப்பிரமணி (50). இவர் கோவையில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் படித்து வருகிறார். இந்நிலையில் பலசுப்பிரமணி சொந்த ஊர் செல்ல நேற்று தனது நண்பரான விஜய் என்பவருடன் கோவை ரயில் நிலையம் வந்தார்.

அப்போது அவரது உடைமைகளை நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலின் இருக்கையில் வைத்து விட்டு, கிழே இறங்கிச் சென்று நண்பருடன் பேசி விட்டு உள்ளே வந்து பார்த்த போது அவரது லேப்டாப் பை மாயமானது தெரியவந்தது.

இதையடுத்து அவர் ரயில்வே போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் ரயில் நிலையத்தைக் கண்காணித்த போது 5ஆவது நடைமேடையில் லேப்டாப் பையுடன் சென்ற இளைஞரைப் பிடித்த விசாரித்த போது, லேப்டாப் திருடியது தெரியவந்தது.

மேலும் அவரிடம் போலீசார் விசாரித்ததில், கேரளா மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த சியாஸ் (20) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து லேப்டாப் மற்றும் ரூ.4 ஆயிரம் ரூபாயைப் பறிமுதல் செய்து சியாஸை கைது செய்தனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இன்னோவிஷன்-2026 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் ஆய்வுநோக்கை ஊக்குவிக்கும் வகையில் இன்னோவிஷன்-2026 அறிவிய...

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...