தாராபுரத்தில் தமிழ் புலிகள் கட்சிகள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் நடக்கும் தீண்டாமை கொடுமைகளை தடுக்க கோரியும், தமிழகத்தில் கலவரத்தை தூண்டுகின்ற வடமாநிலத்தவர்களிடமிருந்து தமிழகத்தை பாதுகாக்ககோரியும் தமிழ் புலிகள் கட்சியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: தாராபுரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் புலிகள் கட்சிகள் சார்பில், மாவட்டச் செயலாளர் குண்டடம் காளிமுத்து தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மேலும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மேற்கு மண்டல துணைச்செயலாளர் ஒண்டிவீரன். வடக்கு மாவட்டச் செயலாளர் கனக சபாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், தமிழகத்தில் நடைபெறும் தீண்டாமை கொடுமைகளைத் தடுக்க கோரியும்,வடமாநில தொழிலாளர்களால் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்தும், தமிழகத்தில் கலவரத்தைத் தூண்டுகின்ற வடமாநிலத்தவர்களிடமிருந்து தமிழகத்தைப் பாதுகாக்கக் கோரியும், பனியன் நிறுவனங்களின் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கான ஊதியத்தை அரசே நிர்ணயிக்க வலியுறுத்தப்பட்டது.



ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளர் வடிவேல், வழக்கறிஞர் அணி முருகையா பாண்டி, மாவட்ட பொருளாளர் ராமசாமி, தொகுதி துணைச் செயலாளர் சக்திவேல், குண்டடம் ஒன்றிய செயலாளர் மதன்குமார், குண்டடம் ஒன்றிய துணைச் செயலாளர் சரவணன், வெள்ளகோவில் ஒன்றிய செயலாளர் அபிஷேக் மற்றும் பழனிச்சாமி, சிவக்குமார், சந்தோஷ், செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...