ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதியளித்த தனி நீதிபதி உத்தரவு ரத்து - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணியை சுற்றுச்சுவருடன் கூடிய திடலில் நடத்த அனுமதியளித்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம் பேரணி நடத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மீண்டும் விண்ணப்பிக்கலாம் எனவும் உத்தரவு.


கோவை: ஆர்.எஸ்.எஸ் பேரணியை சுற்றுச்சுவருடன் கூடிய திடலில் நடத்த அனுமதியளித்த தனி நீதிபதியின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

கடந்தாண்டு காந்தி பிறந்த நாளையொட்டி அக்டோர் 2ம் தேதி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அணிவகுப்பு நடத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பு திட்டமிட்டது. ஆனால் இந்த அணிவகுப்பு தமிழக காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நவம்பர் 6ஆம் தேதி ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட்ட நிலையில், பல்வேறு பகுதிகளில் காவல்துறை அனுமதி வழங்கவில்லை என மீண்டும் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன், ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பை உள் அரங்குகளில் நடத்தலாம் என உத்தரவிட்டிருந்தார். இதனை ஏற்க மறுத்த ஆர்.எஸ்.எஸ். தரப்பில் மீண்டும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள், ஆர்.எஸ்.எஸ். பேரணியை சுற்றுச்சுவருடன் கூடிய திடலில் நடத்த வேண்டும் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

மேலும், ஆர்.எஸ்.எஸ் பேரணியை நடத்த மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்றும், அவ்வாறு விண்ணப்பித்தால் சட்டப்படி பரிசீலனை செய்து முடிவெடுக்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அதேபோன்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரும், யாருடைய மனதையும் புண்படுத்தக்கூடாது. மற்ற மதத்தினரை புண்படுத்தும்படி கோஷங்களை எழுப்பக்கூடாது என நிபந்தனையும் விதித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...

வேட்புமனு தாக்கல் செய்த 2 நாட்களில் 110 வழக்கு: தேர்தல் ஆணையத்திடம் K. Surya புகார்

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச்செயலாள...

கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவை

தென் ரயில்வே கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவையை அறிவித்துள்ளது. திருந...

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...