வால்பாறை அருகே அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் மீன் வலையில் சிக்கிய முதலை - சுற்றுலா பயணிகள் அச்சம்!

வால்பாறை அருகே அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் மீனுக்காக வீசப்பட்ட வலையில், சிக்கிய முதலையை பிடிக்கும் பணியில் வனத்துறை தீவிரம். முதலையை விரைவில் பிடிக்கும்படி பொதுமக்கள் கோரிக்கை.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் மீனுக்காக வீசப்பட்ட வலையில் முதலை ஒன்று சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வால்பாறை அருகேயுள்ள உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி என்பது அதிகளவில் மக்கள் வந்து செல்லும் பிரபலமான சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு உள்நாடு மட்டுமல்லாது வெளிநாட்டில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சியை காண வந்து செல்கின்றனர்.



இந்நிலையில் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அருகே மீன் பிடிப்பதற்கு வலையை விரித்துள்ளனர். இதில் முதலை ஒன்று சிக்கிக்கொண்டு நீண்ட நேரம் போராடி கொண்டிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்தது மட்டுமல்லாமல் வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.



மீன் வலையில் சிக்கிய முதலையை வனத்துறையினர் காப்பாற்றுவதற்காக தண்ணீரில் இறங்கிய நிலையில், ஆட்களை பார்த்ததும் முதலை தண்ணீருக்குள் சென்று மறைந்தது.

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் முதலை இருப்பதை கண்ட சுற்றுலா பயணிகள் அச்சத்தில் இருந்து வரும் நிலையில், முதலையை தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், அதிக மக்கள் வந்து செல்லும் சுற்றுலா தலம் என்பதால், உடனடியாக முதலையை பிடித்து வேறு பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும் என வனத்துறைக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை கண்ணப்பநகரில் அண்ணாமலை தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் கண்ணப்பநகர் பகுதியில் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் K.Annamalai, அதிமுக கோவை வடக்...

பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், தீவிர பிரச்சாரத்தால் ஏற்பட்ட காலில் வலி மற்று...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

தொண்டாமுத்தூர்: திமுக வேட்பாளர் என்.ஆர். கார்த்திகேயன் வெற்றிக்காக கட்சியினர் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் – செந்தில் பாலாஜி

தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டத்தில், கூட்டணிக் கட்சிகளின் நிர்வ...

வால்பாறை: திமுக வேட்பாளருக்கு ஆதரவு கோரி டாக்டர் மகேந்திரன் பரப்புரை..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் குட்டி என்கிற ஆ. சுதாகருக்கு ஆதரவு கோரி, பொள்ளாச்சி மற்றும் வால்பாறை தேர்தல்...