வால்பாறை அருகே அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் மீன் வலையில் சிக்கிய முதலை - சுற்றுலா பயணிகள் அச்சம்!

வால்பாறை அருகே அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் மீனுக்காக வீசப்பட்ட வலையில், சிக்கிய முதலையை பிடிக்கும் பணியில் வனத்துறை தீவிரம். முதலையை விரைவில் பிடிக்கும்படி பொதுமக்கள் கோரிக்கை.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் மீனுக்காக வீசப்பட்ட வலையில் முதலை ஒன்று சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வால்பாறை அருகேயுள்ள உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி என்பது அதிகளவில் மக்கள் வந்து செல்லும் பிரபலமான சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு உள்நாடு மட்டுமல்லாது வெளிநாட்டில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சியை காண வந்து செல்கின்றனர்.



இந்நிலையில் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அருகே மீன் பிடிப்பதற்கு வலையை விரித்துள்ளனர். இதில் முதலை ஒன்று சிக்கிக்கொண்டு நீண்ட நேரம் போராடி கொண்டிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்தது மட்டுமல்லாமல் வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.



மீன் வலையில் சிக்கிய முதலையை வனத்துறையினர் காப்பாற்றுவதற்காக தண்ணீரில் இறங்கிய நிலையில், ஆட்களை பார்த்ததும் முதலை தண்ணீருக்குள் சென்று மறைந்தது.

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் முதலை இருப்பதை கண்ட சுற்றுலா பயணிகள் அச்சத்தில் இருந்து வரும் நிலையில், முதலையை தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், அதிக மக்கள் வந்து செல்லும் சுற்றுலா தலம் என்பதால், உடனடியாக முதலையை பிடித்து வேறு பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும் என வனத்துறைக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...